Monday, August 3, 2026
No menu items!

ஊடகப்பிரிவு

கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது!

அனலைத்தீவு கடற்பகுதியில் வைத்து 197 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் அனலைத்தீவு கடற்பகுதியில் இன்று (03) அதிகாலை முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கேரளா கஞ்சா தொகையானது 78 பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேசாலை மற்றும் காரைநகரைச் சேர்ந்த 29 மற்றும் 43 வயதுடைய சந்தேகநபர்களே...

எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் ஏனைய கட்சித் தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக இணைந்து செயல்படுவது தொடர்பாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கில் இந்த கலந்துரையாடல்...

காவல்நிலைய சிறைக்கூடத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

மருதானை காவல்நிலைய சிறைக்கூடத்தில் பெண் ஒருவர் இன்று அதிகாலை உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். காவல்துறை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. வவுனியாவைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பெண் நேற்று இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    

இரண்டு அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்!

இரண்டு அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, கே.ஆர்.உடுவெல சுற்றாடல் அமைச்சின் செயலாளராகவும், வை.எல் மொஹமட் நவாவி விஞ்ஞானம் மற்றும் தொழினுட்பவியல் அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

ஈரான் மீதான தாக்குதல் ரத்து; டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். தெஹ்ரானுடன் விரைவாக ஒப்பந்தம் எட்டும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக...
- Advertisement -spot_img