Wednesday, July 29, 2026
No menu items!

எதிர்க்கட்சி

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா!

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் இராஜினாமா செய்துள்ளார். பாராளுமன்றத்தில் (06) இன்று விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே அவர் தனது ராஜினாமாவை அறிவித்தார். அரசாங்கக் கணக்குகள் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க இணக்கம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு வழி வகுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக...

கணக்காய்வாளர் நாயக நியமனம் தொடர்பில் கரு ஜெயசூர்யா பதிலடி!

தேசிய அரசியலமைப்பு சபை, கணக்காய்வாளர் நாயக பதவிக்கான ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பரிந்துரையை நிராகரித்தமைக்குத் தனது கவலையை முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூர்யா வெளியிட்டுள்ளார். இது நாட்டின் ஜனநாயக அமைப்பிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சபை, பல்வேறு கட்சிகளின் ஒற்றுமையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மிக முக்கியமான அமைப்பாகும் என்றும்,...

உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பில் நாளை கலந்துரையாடல்!

உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாளை (17) கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்க்கட்சிகளின் செயலாளர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். நேற்று (15) இரவு கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இந்த விடயம் குறித்து கலந்துரையாடலை மேற்கொண்டு உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மைக்கு தேவையான...

இன்று மற்றும் நாளை கூடவுள்ள பாராளுமன்றம்!

நாடாளுமன்றம் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களில் கூடவுள்ளது. இதன்படி, இன்றைய தினம் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இறக்குமதி வரிகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஒத்திவைப்பு வேளையில், எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது. அத்துடன், நாளைய தினம் ஹேஷா விதானகே, ரோஹண பண்டார, சமிந்த விஜேசிறி...

கொழும்பு மாநகர சபையில் எதிர்க்கட்சிகளே பெரும்பான்மையைக் கொண்டுள்ளது; ரஞ்சித் மத்தும பண்டார!

கொழும்பு நகர முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளின் ஆதரவைக் கோரும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி அதிக இடங்களை வென்ற போதிலும், எதிர்க்கட்சிகளே பெரும்பான்மையைக் கொண்டுள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.

தலவாக்கலையில் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் 'கிராமத்தை வெல்லும் போராட்டத்தின் தொழிலாளர்களின் பலம்' என்ற தொனிப்பொருளின் கீழ் நாளை பிற்பகல் 2 மணிக்கு தலவாக்கலை நகரில் நடைபெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம்...

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச நியமிக்கப்படுவார்; கபீர் ஹாஷிம்!

எதிர்க்கட்சியும் சமகி ஜன பலவேகய (SJB) தலைவருமான சஜித் பிரேமதாச இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் என்று சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது உறுதியளித்தார். அதிகாரிகளே சஜித் பிரேமதாசவிடம் அதிகாரத்தை ஒப்படைப்பார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் கூறினார். "மெதுவாகப் போவோம். நாம்...

பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை அமுல்படுத்த சஜித் பிரேமதாச கோரிக்கை!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமாதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று செவ்வாக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “வெளிநபர் ஒருவர் வைத்தியரை அவரது பணி அறைக்குள் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக்...

இலங்கையின் முதலீடுகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கவலை..!

இலங்கை பெறும் முதலீடுகளின் நிலை தொடர்பில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கவலை வெளியிட்டுள்ளது. முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும் தக்க வைத்து கொள்வதற்கும் நாடு விவேகமான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது. நேற்று (09/03/2025) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்தக்...

உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கு எதிராக எதிர்க்கட்சி வழக்கு தாக்கல்..!

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான காலக்கெடுவிற்கு முன்னர், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோருவதற்கு எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக வழக்குத் தொடர எதிர்க்கட்சி முடிவு செய்துள்ளது. உள்ளூராட்சி தேர்தலுக்கான புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கை, மார்ச் 28 ஆம் திகதி வரை செய்யப்படலாம் என்று தேர்தல் ஆணைக்குழு முன்னதாக கூறியிருந்தது. ஆனால் , உள்ளூராட்சித் தேர்தலுக்கான...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img