Tuesday, April 28, 2026
No menu items!

ஜீவன் தொண்டமான்

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிற்கு போதியளவு நிதி ஒதுக்கவில்லை – ஜீவன் தெரிவிப்பு..!

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிற்கு முன்னைய ஆட்சி காலத்தின் போது போதியளவு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளவில்லையென முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (07.02.2025) பாராளுமன்றத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், 2024 ஆம் ஆண்டு நான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் கனிசமான நிதி ஓதுக்கீடானது தோட்ட உட்கட்டமைப்பு...

மறைந்த மாவையின் பூதவுடலுக்கு ஜீவன் தொண்டமான் இறுதி அஞ்சலி..!

இறைபதமடைந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இ.தொ.கா பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இறுதி அஞ்சலி செலுத்தினார். காங்கேசந்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு இன்று (02) சென்று மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு மலர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்திய...

மாவை சேனாதிராஜாவுக்கு இரங்கல் தெரிவித்த MP ஜீவன் தொண்டமான்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் தூணாகவும், இலங்கை அரசியல் அரங்கில் ஒரு முக்கியஸ்தராகவும் இருந்த, மறைந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு ஜீவன் தொண்டமான் இரங்கல் தெரிவித்துள்ளார். குறித்த இரங்கல் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான, மாவை சேனாதிராஜா ஐயா...

ஜீவன் தொண்டமானின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி..!

"2025ம் ஆண்டு நம்பிக்கை நிறைந்த ஆண்டாகத் திகழட்டும் மலையக மக்களின் தேவைகளிலும், அவர்களது முயற்சிகளிலும் நாம் கைகொடுப்போம்." என இ.தொ.கா. பொதுச் செயலாளரும், நுவரெலியா  மாவட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில், பிறக்கின்ற ஒவ்வொரு புத்தாண்டும் மாற்றங்களையும். முன்னேற்றங்களையும் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு...

அரசின் அசமந்தமே சபநாயகர் பதவியின் சர்ச்சைக்கு காரணம் – ஜீவன் பதிவு..!

சபாநாயகர் அசோக ரன்வலவின் பதவி இராஜினாமா அவசியமான ஒன்றாக இருந்தாலும், முக்கியமான பதவிகளுக்கான பிரமுகர்களை தேர்ந்தெடுக்கும்போது அரசாங்கம் தீர்மானம் எடுப்பதில் ஏற்பட்டுள்ள அசமந்தமான குறைபாட்டை பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், இந்த நிலைமையை சரி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சி வரவேற்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார். கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்த...

அமைச்சர்களின் கல்வித் தகைமை என்ன? – ஆராய புதிய திட்டம்!

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களின் கல்வித் தகைமைகளை ஆராய தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பிக்க ஐக்கிய தேசியக் கட்சியும் புதிய ஜனநாயக முன்னணியும் தீர்மானித்துள்ளன. இது தொடர்பான பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஊடாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் ஐ.தே.க சார்பில் ஜீவனுக்கு முக்கிய பொறுப்பு..!

பொதுத் தேர்தலில் சிலிண்டர் மற்றும் யானை சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் குழுவின் தலைவராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலியா மாவட்டத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஆவார். 46,438 அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான ஜீவன்...

தேசிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு காஞ்சன விஜேசேகரவை பரிசீலிக்குமாறு கோரிக்கை; ஜீவன் தொண்டமான்!

புதிய பாராளுமன்றத்திற்கு எதிர்கட்சியில் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் தேவை என்பதை எடுத்துக்காட்டி, கட்சியின் எஞ்சிய தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை பரிசீலிக்குமாறு தேசிய ஜனநாயக முன்னணியிடம் (NDF) முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் பெரும்பான்மையை கருத்தில் கொண்டு, அரசாங்கத்தை...

அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜீவன் தொண்டமான்..!

என் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் என்னை பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில், ஐ.தே.க யின் யானை சின்னத்தில் போட்டியிட்டு 46438 விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான். இந்த வெற்றி தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்… என்னால் முழுமையாக...

மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி 8 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு..!

மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி 8 உறுப்பினர்கள் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏழு மலையகத் தமிழர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட கிஷ்ணன் கலைச்செல்வி 33346 வாக்குளை பெற்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்ப்பில் ஜீவன் தொண்டமான்...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28)...
- Advertisement -spot_img