Monday, June 15, 2026
No menu items!

தேர்தல் ஆணையாளர் நாயகம்

வேட்பாளர்களின் தகவல்கள் தொடர்பில் அரசியல் கட்சிகளை வலியுறுத்தும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 40 சதவீதமான வேட்பாளர்களின் தகவல்கள் இதுவரையில் தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதுடன், உடனடியாக அந்தத் தகவல்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார். ஜூன் 02ஆம் திகதியுடன் சபைகளின் பணிகளை ஆரம்பிக்கவேண்டியுள்ளதால் அதற்கு முன்னர் உறுப்பினர்களின் பெயர்களை...

தேசிய தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டார மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 சதவீதத்தினரின் பெயர்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், உறுப்பினர்களின் எண்ணிக்கையை வர்த்தமானி மூலம் வெளியிட வேண்டியிருப்பதால், தொடர்புடைய வேட்பாளர்களின் பெயர்களை உடனடியாக அனுப்புமாறு அந்தப் பிரிவினரிடம் கோரிக்கை விடுப்பதாக தேர்தல்...

தேர்தல் முறைப்பாடுகளை பொலிஸார் முகாமைத்துவம் செய்வது தொடர்பில் கலந்துரையாடல்..!

தேர்தல் முறைப்பாடுகளை பொலிஸார் முகாமைத்துவம் செய்வது மற்றும் தேர்தல் கடமைகளின் போது பொலிஸாரின் வகிபாகம் தொடர்பாக வடமாகாணத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல் கிளிநொச்சியிலுள்ள தனியார் விடுதியில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடக் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் திரு. பி. பீ. சி. குலரத்ன மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்...

தேர்தல் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளையும் வாக்காளர் பட்டியலில் இணைந்து கொள்வது தங்களது எதிர்பார்ப்பாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வாக்காளர் பதிவு நாள் என்பதால், அந்த நாளில் தாங்கள் வசிக்கும் முகவரிக்கு ஏற்ப வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளடக்கப்படும்...

வேட்பாளர் பட்டியல்களில் உள்ளடங்காதவர்களின் பெயரை தேசியப்பட்டியலில் தெரிவுசெய்ய முடியாது…!

தங்களது வேட்பாளர் பட்டியல்களில் உள்ளடங்காத ஒருவரின் பெயரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்ய முடியாது எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். தேசியப் பட்டியல் நியமனம் குறித்து கொழும்பில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளவர்களைத் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகக் கட்சியின் செயலாளரினால்...

தேர்தல் செயற்பாடுகள் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது;தேர்தல் ஆணையாளர் நாயகம்!

வாக்களிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் தேர்தல் செயற்பாடுகள் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். வாக்களிப்பு செயற்பாடுகளில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் தொடர்பில் கடமையாற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா...

தபால் மூல வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றது ; தேர்தல் ஆணையாளர் நாயகம்!

பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (30) இடம்பெற்றதாகவும், அது அமைதியாக நடைபெற்றதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுத்து இன்று நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற்றதாக தெரிவித்தார். மேலும், எதிர்வரும் தேர்தலில் அமைதியான சூழலை பேணுமாறு அனைத்து வேட்பாளர்களிடமும்...

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினங்கள் அறிவிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினங்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், ஒக்டோபர் 27 மற்றும் நவம்பர் 03 ஆகிய தினங்களில் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் தினங்களாக கருதப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ வாக்காளர்...

பாராளுமன்றத் தேர்தலில் 10,000 வேட்பாளர்கள் போட்டி…!

பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சுமார் 10,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக 764 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் வேட்பு மனுக்களை சமர்ப்பித்துள்ள நிலையில், அதில் 74 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி,...

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேடு பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டமும்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img