பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (30) இடம்பெற்றதாகவும், அது அமைதியாக நடைபெற்றதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுத்து இன்று நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற்றதாக தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் தேர்தலில் அமைதியான சூழலை பேணுமாறு அனைத்து வேட்பாளர்களிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில பகுதிகளில் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விளம்பரங்களை அகற்றுமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

மொத்தம் 737,902 அரசு ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் திணைக்களத்திற்கு உட்பட்ட அனைத்து அலுவலகங்களிலும் இன்று தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here