Wednesday, July 29, 2026
No menu items!

தொழிற்சாலை

வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலைக்கு புதிய உற்பத்தி இயந்திரங்கள்!

வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலைக்கு புதிய உற்பத்தி இயந்திரங்களைக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி  அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த தொழிற்சாலை தற்போது லாபம் ஈட்டி வருவதாக அமைச்சர் தனது முகப்புத்தக பதிவு ஒன்றின் ஊடாக இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிறிது காலம் மூடப்பட்டிருந்த இந்தத் தொழிற்சாலை, இப்போது லாபம்...

எந்தவொரு முன்னறிவிப்பு இன்றி  மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலை; வேலையின்றி தவிக்கும் ஊழியர்கள்!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள NEXT ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் அங்கு பணிபுரிந்த 1,400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த தொழிற்சாலையின் நிர்வாகம் முன்னறிவிப்பு இன்றி தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொழிற்சாலை தற்போது பூட்டப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் பணியாளர்கள் மட்டுமே அங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அங்கு பணிபுரிந்த பணியார்கள், எதிர்கால நடவடிக்கைகள்...

முதற் தடவையாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட டின் மீன்கள்!

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட டின் மீன்கள் முதற் தடவையாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் மேற்பார்வையில் மதுரங்குளியிலுள்ள தொழிற்சாலையொன்றில் உற்பத்தி செய்யப்பட்ட டின் மீன்கள் இவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்கள் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுவது இதுவே...

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து!

கண்டி மாவட்டம் கட்டுகஸ்தோட்டையில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 62 வயதுடைய ஒரு பெண் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, அதே நேரத்தில் தீ விபத்து காரணமாக தொழிற்சாலை முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வரவு செலவு திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை – ஶ்ரீநாத் எம்.பி..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியை செய்வதற்கான முறையான திட்டங்களின் முன்மொழிவு, மேட்டுநில விவசாயிகட்கு நட்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இளைஞர், யுவதிகட்கு வேலை வாய்ப்பினை வழங்கக்கூடிய வகையில் தொழிற்சாலைகளை உருவாக்கல், கடந்த காலங்களில் உருவாக்கிய தொழிற்சாலைகளை புனர்நிர்மாணம் செய்ய வரவு செலவு திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் கருத்து...

பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் தீப்பரவல்!

ஹொரணை, பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது . தீயை அணைக்க கொழும்பு மற்றும் களுத்துறை நகராட்சி மன்றங்களின் தீயணைப்பு படையினர், ஹொரண தீயணைப்பு படையினருடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கருவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் நேற்று (13) இந்த தீ விபத்து ஏற்பட்டமை...

ரயிலில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!

புத்தளம் கரடிப்பூவல் பிரதேசத்தில் புத்தளம் - எலுவன்குளம் ரயில் மார்க்கத்தில் ரயிலில் மோதி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது. 30 வயதுடைய காட்டு யானை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது. புத்தளம் பிரதேசத்தில் உள்ள சீமெந்து தொழிற்சாலை ஒன்றிற்கு சுண்ணாம்புக் கற்களை கொண்டு சென்ற சரக்கு...

தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு!

கம்பஹா,திவுலப்பிட்டிய , படல்கம பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (14) இடம்பெற்றுள்ளது. இதில் உயிரிழந்தவர் 50 வயதுடையவராவார். காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

மகளின் முகத்தை தீக்குச்சியால் எரித்து சித்திரவதை செய்த தந்தை!

பண்டாரவளை, லியாங்கஹவெல- அம்பதண்டேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது 12 வயது மகளின் முகத்தை தீக்குச்சியால் எரித்து கொடூரமாக சித்திரவதை செய்த தந்தை ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டாரவளை அம்பதந்தேகம பிரதேசத்தின் லியங்கஹவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 7 இல்...

தீ விபத்தில் பலர் பலி!

தென்கொரியா சியோல் தலைநகர் ஹ்வாசோங்கில் உள்ள அரிசெல் தொழிற்சாலையில் பல லித்தியம் பட்டரிகள் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்போது தொழிற்சாலையில் சுமார் 100 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன்  உயிரிழந்தவர்களில்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img