Sunday, June 7, 2026
No menu items!

நாடாளுமன்றத் தேர்தல்

வாக்காளர்கள் மற்றும் தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் ஆராய வேண்டும்; பஃப்ரல் அமைப்பு…!

இலங்கையில் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இருப்பது மூன்று நாட்கள் மாத்திரமே. அதன்படி, வாக்குகளை வழங்கவுள்ள வாக்காளர்கள், தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் குறிப்பிட்ட நாட்களில் ஆராய வேண்டும் என பஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. வரப்பிரசாதங்கள் அல்லது தற்காலிக சலுகைகள் தொடர்பில் சிந்திக்காது பொருத்தமான நபர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் நோக்கில் வாக்காளர்கள் செயற்பட வேண்டும்...

பொது தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 13ஆம் திகதி புதன்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு மையங்களாகப்...

பொதுத் தேர்தலை நவம்பர் 14ஆம் திகதி நடத்துவது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நவம்பர் 14ஆம் திகதி நடத்துவது என்ற தேசிய தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, இலங்கை உச்ச நீதிமன்றத்தால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. நவம்பர் 14 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானம் அரசியலமைப்பை மீறுவதாக நீதிமன்றத்திற்கு உத்தரவிடுமாறு கோரி இந்த மனு...

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை 600 முறைப்பாடுகள் பதிவு!

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி வரை) 600 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 196 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு...

74 வேட்புமனுக்கள் நிராகரிப்பு…!

நாடாளுமன்ற தேர்தலுக்காக 764 வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில் 74 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 22 தொகுதிகளுக்கும் 690 குழுக்கள் போட்டியிடும் என அறிவித்துள்ளார். இம்முறை திகாமடுல்ல தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான அரசியல் கட்சிகளும் குழுக்களும் போட்டியிடுகின்றன. குறித்த தொகுதியில் 64 குழுக்கள் போட்டியிடுகின்றன....

பொதுத் தேர்தலில் போட்டியிடாத மஹிந்த மற்றும் நாமல்…!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலையான நாமல் ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இருவரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இம்முறை நாடாளுமன்ற தேர்தலுக்காக இதுவரையில் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் அவர் இம்முறை தேர்தலில்...

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை ; நவீன் திஸாநாயக்க!

சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகருமான நவீன் திஸாநாயக்க எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தீர்மானித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமான யானைக்கு பதிலாக எரிவாயு சிலிண்டராக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் எழுந்துள்ள முரண்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக 'X' க்கு...

தேர்தலில் போட்டியிடப் போவதில்லை;  ஷெஹான் சேமசிங்க!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர் தெளிவுபடுத்திய போதிலும், அவர் அரசியலில் இருந்து விலகிவிட்டார் என்று அர்த்தமில்லை. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் அரசாங்கத்துடன் இணைந்து தேசத்தை மீளக் கட்டியெழுப்ப தன்னால் இயன்ற உதவிகளை வழங்கியதாகவும்,...

தேசிய மக்கள் சக்தி கட்சியில் வேட்புமனுக்களை பெற்றுக்கொள்ள அதிகமானோர் போட்டி…!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி கட்சியில் வேட்புமனுக்களை பெற்றுக்கொள்ள அதிகமானோர் போட்டியிடுவதாக அறியக் கிடைத்துள்ளது. இவ்வாறான ஒரு சூழலில், வேட்புமனுவை எதிர்ப்பார்த்து காத்திருந்தும் கிடைக்காத சிலர் மனஸ்தாபத்திற்கு உள்ளாகியுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மற்றும் அதற்கு முன்னர் அதிகளவில் கஷ்டப்பட்டு உழைத்தவர்கள் சிலர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்...

கட்சிகளுக்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கவேண்டும்; தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம்!

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகளைத் தேர்தல் அறிக்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான அவற்றின் எதிர்காலத் திட்டங்களை உள்ளடக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும் என்று  தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் இலங்கைத் தேர்தல்கள் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தேர்தல்கள் ஆனையத்துக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்தக்...
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img