Friday, July 17, 2026
No menu items!

நாடாளுமன்ற உறுப்பினர்

தமிழ் மக்களின் நலன் கருதி தம்முடன் பயணிக்குமாறு அழைப்பு விடுத்துள்ள சுரேஷ் பிரேமசந்திரன் !

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், சில சிவில் சமூக அமைப்புகளுக்கும் இடையில் இன்று (26) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நேற்று (25.09.2024)...

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேடு பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டமும்...

விஜித ஹேரத்தை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு!

கடந்த 'நல்லாட்சி' அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்துக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் சந்திரவங்ச பத்திராஜாவுக்கு எதிராக இலஞ்ச...

TPF இன் அரசியல் உயர்பீடக் கூட்டம் இவ்வார இறுதியில்; மனோ கணேசன்!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் இவ்வார இறுதியில் நடைபெறவுள்ளது என அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகள் மற்றும் அடுத்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக இதன்போது அவதானம் செலுத்தப்படும் என்றும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை நிறுத்தம்…!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை நிறுத்தப்பட்டுள்ளது. அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன, இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரின் உறுப்புரிமையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சியின் தீர்மானத்தை மீறி மற்றுமொரு வேட்பாளருக்கு...

மீண்டும் ஒருமுறை நடத்தப்படும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை; தயாசிறி!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அமைக்கப்படும் சஜித் பிரேமதாச அரசாங்கத்தின் கீழ் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை மீண்டும் ஒருமுறை நடத்தப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தற்போது நடந்து முடிந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்துள்ளதாக சுட்டிக்காட்டிய எம்.பி., ஜயசேகர, தேர்தலின்...

சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை வழங்காத கஜேந்திரகுமார் பொன்னம்பலம்..!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளைப் பெறுவதற்கு நாடாளுமன்றத் தலைவர்கள் கடும் சிரமம் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. அதற்காக ஐந்து நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நினைவூட்டல் கடிதங்களுக்குப் பிறகு, 169 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துப் பொறுப்பு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை இதுவரை சமர்ப்பிக்கவில்லை...

நாட்டில் இரத்தக் களரியொன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சி!- தயாசிறி!

நாட்டில் இரத்தக் களரியொன்றை ஏற்படுத்துவதற்குத் தேசிய மக்கள் சக்தி முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கட்டுக்குருந்தவில் நேற்று (13) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களில் ஜே.வி.பியுடன் தொடர்புடைய மாணவ குழுவினர் பல்கலைக்கழகமொன்றில் முன்னிலை சோஷலிச கட்சி மற்றும்...

ரணிலுக்கு பதிலடி கொடுத்த அனுர!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, ​​வடக்கு மக்களை அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட தனது கருத்து தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு பதிலளித்துள்ளார். அவர் தன்னை  பற்றி கூறிய , விமர்சனத்தை நிராகரித்ததோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) பேச்சாளர் எம்.பி.எம்.ஏ.சுமந்திரன் ஏற்கனவே...

விக்னேஸ்வரன் சொல்வதைத் தமிழர்களே கேட்பதில்லை; அனுர…!

நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சொல்வதைத் தமிழர்களே கேட்பதில்லை. நான் அவரையெல்லாம் கண்டுகொள்வேனா என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார். தேர்தல் பரப்புரைகளுக்காக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த அவர், ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், “அனுரகுமார ஜனாதிபதியாகத் தெரிவானால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி...
- Advertisement -spot_img

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...
- Advertisement -spot_img