Tuesday, May 19, 2026
No menu items!

நாமல் ராஜபக்ஷ

போதைப்பொருள் கொள்கலன் விவகாரம்: அரசாங்கம் மீது நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு!

போதைப்பொருள் கொள்கலன்கள் தொடர்பான உண்மைகளை மூடிமறைப்பதற்காக, பொதுஜன பெரமுன மீது அரசாங்கம் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “நாம் திட்டமிட்ட குற்றச்செயற்பாடுகளை ஒழிக்க வேண்டும் என கூறுகிறோம். ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் அரசியல் இலாபம் பெற முயல்கிறது. கொள்கலன்கள் குறித்து பேசப்படுகிறது. அவை துறைமுகத்தில்...

நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் மீது பணமோசடி வழக்கு: மீண்டும் விசாரணை ஜனவரி 29 இல்!

15 மில்லியன் ரூபாவை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்தமையின் ஊடாக பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை ஜனவரி மாதம் 29ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த முறைப்பாடு இன்று (7) கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி...

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாமல் ராஜபக்ஷ நாடு திரும்பினார்!

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து வந்ததாகவும், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதைக் காண முடிந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வழக்கொன்றுக்காக, நீதிமன்றில் முன்னிலையாக தவறியமையினால் நேற்று அவரை கைதுசெய்யுமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை...

நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று (28) அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதன் காரணமாக பிடியாணை​ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாளை (29) சீராக்கல் மனு ஊடாக நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கை அழைப்பதற்கான திகதி அறிவிப்பு..!

கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாய் நிதியை பெற்றுக்கொண்டு நம்பிக்கை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, முன்விசாரணை ஆலோசனை கூட்டத்திற்காக எதிர்வரும் ஜூன் மாதம் 27 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (21/05/2025) கொழும்பு மேல்...

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளைத் தவறாகக் காட்ட நினைக்கும் முயற்சிகள்- சாடும் நாமல்..!

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளைத் தவறாகக் காட்ட நினைக்கும் முயற்சிகள், இலங்கை மக்களின் ஒற்றுமையையும் வலிமையையும் பாதிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், நீண்ட ஆண்டுகளாகத் தொடர்ந்த போரை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டில் அமைதியை நிலைநாட்டிய அனைத்து படையினரின் தியாகத்தையும், அவர்களின் துணிவையும்...

கனடாவின் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் குறித்து கொந்தளிக்கும் நாமல்!

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதாக நாமல் ராஜபக்ச தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து இதற்கான...

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு சவால் விடுத்த நாமல் ராஜபக்ஷ!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஒரு துணிச்சலான சவால் விடுத்தார், SLPP அரசியல் தாக்குதல்களுக்கு பயப்படவில்லை என்று வலியுறுத்தினார். மேடையில் இருந்து பேசிய ராஜபக்சே, SLPP உறுப்பினர்களை இழிவுபடுத்தவும் சிறையில் அடைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கட்சி மக்களுக்கான அதன் உறுதிப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அறிவித்தார். பொஹோட்டுவா...

இந்தியாவுடன் ஏற்படுத்தி கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பிய நாமல்!

தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாடம் கற்பிக்கவுள்ளதாக தெரிவித்து ஆட்சியமைத்த அரசாங்கத்துக்கு தனி மனித பாதுகாப்பையேனும் உறுதிப்படுத்த முடியாமல் போயுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெலிமடை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பில் கருத்துரைத்த அரசாங்கத்தின் காலப்பகுதியிலேயே...

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு – கொந்தளிக்கும் நாமல்..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னரா அரசாங்கம் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கிறது என்ற  சந்தேகம் காணப்படுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் வியாழக்கிழமை (24/04/2025) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான...
- Advertisement -spot_img

Latest News

140 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதை பொருள் பறிமுதல்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை பயணிகள் இருவரிடம் இருந்து 14.562 கிலோ குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட குறித்த குஷ் போதைப்பொருளின் சந்தை மதிப்பு...
- Advertisement -spot_img