Thursday, April 23, 2026
No menu items!

பலாங்கொடை

பலாங்கொடை பகுதியில் காட்டுத்தீ!

பலாங்கொடை, இம்புல்பே - ரத்தனகொல்ல பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் இலங்கை விமானப்படையின் பெல் 412 உலங்கு வானூர்தி ஈடுபட்டு வருவதாக விமானப்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

போலி விளம்பரங்கள் மூலம் சமூக ஊடகங்களில் மோசடி; ஒருவர் கைது!

விற்பனைக்கு உள்ள வாகனங்களின் விளம்பரங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு பணத்தை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. நிதி மோசடி தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தொடங்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பலாங்கொடை நகரில் உள்ள ஹல்துமுல்ல காவல் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று (மே 28) சந்தேக நபர்...

கற்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நபர்..!

மொனராகல, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலுத்வெவ பகுதியில் இருவர் மீது கற்களால் தாக்குதல் மேற்கொண்டமையினால் ஒருவர் உயிரழிந்துள்ளார். காயமடைந்த இருவரில் ஒருவர் ஹம்பேகமுவ பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக ஹம்பேகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். பலாங்கொடையை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமரதுங்க ஆராச்சிகே ராஜபக்ஷ மற்றும் அதே பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஹேவாவலிமுனிகே...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விளக்கமறியலில்!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி வரை குறித்த 4 மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்க பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், மன அழுத்தம் காரணமாக உயிர்மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக...

மகனை தடியால் தாக்கி விஷம் குடித்த தந்தை!

பலாங்கொடை காவல் எல்லைக்குட்பட்ட பஹல மஸ்ஸன்ன பகுதியில், ஒரு தந்தை தனது மகனின் தலையில் தடியால் அடித்து விஷம் குடிக்கச் செய்தார். மார்ச் 4 ஆம் திகதி இரவு, மகன் ஒரு தடியால் தாக்கப்பட்டார், பின்னர் தந்தையும் விஷம் குடித்தார், இருவரும் ஆபத்தான நிலையில் பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மகனின் நிலைமை மோசமாக இருப்பதால், மேலதிக...

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 15 பேர் கைது!

பலாங்கொடை, வலேபொட வளவ கங்கை வனப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 15 சந்தேக நபர்கள் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக பலாங்கொடை வன வள பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலாங்கொடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஒரு குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மாணிக்கக்கற்களை வெட்டி எடுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட மின்சார மோட்டார், கம்பிகள் மற்றும் பிற...

குளிர்பான போத்தலொன்றை அருந்திய தந்தையும் மகளும் வைத்தியசாலையில் அனுமதி!

பலாங்கொடை - கிரிதிகல பகுதியில் உள்ள உணவகமொன்றில் விற்பனை செய்யப்பட்ட குளிர்பான போத்தலொன்றை நுகர்வு செய்து அருந்திய தந்தையும் அவரது மகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பானத்தை அருந்தியதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக அவர்கள் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரியை சேர்ந்த 40 வயதான தந்தையும் 9...

திடீர் ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

 ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று திடீர் ஒவ்வாமை காரணமாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (25) பிற்பகல் 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. கழிவறைகளை கழுவுவதற்கு பயன்படுத்தப்படும் திரவத்தினால்  இந்த ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருமகனை தாக்கிய மாமனார்…!

பலாங்கொடை தஹமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மருமகன் உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (11.10) தெரிவித்தனர். பலாங்கொட தம்மானே பகுதியைச் சேர்ந்த 44 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைத் தாக்கச் செல்லும் போது மனைவியின் தந்தை...

வாழைப்பழம் தொண்டையில் சிக்கி முதியவர் உயிரிழப்பு! 

பலாங்கொடை வெலிகேபொல பிரதேசத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கி முதியவர்  ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலாங்கொடை வெலிகேபொல பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் சுவாசிப்பதற்குச் சிரமம் ஏற்பட்டு முதியவர் உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img