Monday, June 15, 2026
No menu items!

பாதுகாப்பு அமைச்சர்

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு வாகனங்களை மீள வழங்கும் வாய்ப்பு – ஆனந்த விஜேபால!

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை, அவர்கள் கோரினால் மீண்டும் ஒப்படைக்கலாம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் படி, சில வரப்பிரசாதங்கள் மீள வழங்கப்பட வேண்டும். எனினும், பாதுகாப்பு விடயங்கள் சட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. இதனால், முன்னாள் ஜனாதிபதிகள் தாங்கள் அனுபவித்த வரப்பிரசாதங்களிலிருந்து...

12 ஆண்டுகளுக்குப் பிறகு கஜ்ஜா அடையாளம் காணப்பட்டார் – பின்னணி அரசியல் தொடர்பா?-

12 ஆண்டுகளாக அடையாளம் காண முடியாத நிலையில் இருந்த கஜ்ஜா என்ற நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தின் பின்னால் அரசியல் காரணங்கள் உள்ளனவா இல்லையா என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை என்றாலும், இன்று வெளியான ஒரு பத்திரிகைச் செய்தியில் கஜ்ஜா என்ற நபர் முன்னாள்...

நாட்டில் 14,834 சிறார்கள் ஆபத்தான நிலையில் – 15 வயதில் பாதாள உலகில் இழுக்கும் சவால்!

நாட்டில் சுமார் 14,834 சிறார்கள் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயம், கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட பல்துறை போதைப்பொருள் தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அதிகாரிகள், பாதிக்கப்படக்கூடிய சிறார்களின் நலனுக்காக பணியாற்றி வருவதாகவும், குடும்பத்தை...

காசா நகரம் மீது இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் தொடக்கம்!

காசா நகரை முழுமையாக கைப்பற்றும் திட்டத்தின் கீழ், இஸ்ரேலிய இராணுவம் தரைவழித் தாக்குதலின் முதற்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. தற்போது காசாவின் புறநகரப் பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஜெய்டவுன் மற்றும் ஜபாலியா பகுதிகளில் துருப்புக்கள் செயலில் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சர் யோவ் காட்ஸ் ஒப்புதலை வழங்கியதையடுத்து இந்த தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....

சி.ஐ.டியில் ஆஜராகும் பிள்ளையானின் நெருக்கமான சகா –  வெளியான பரபரப்பு தகவல்!

ஆட்கடத்தல் சம்பவம் ஒன்றுக்காக கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் நெருக்கமான சகா ஒருவர், தனது சுயவிருப்பின்பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருக்கிறார். கொழும்பில் ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ஆனந்த விஜேபால, கம்மன்பில - பிள்ளையான் சந்திப்பின்போது பிள்ளையான் அழவில்லை என்றும்...

தேசபந்து தென்னகோன் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலை!

இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 20 நாட்களின் பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்த காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் அருண புத்ததாச நேற்று உத்தரவிட்டார். இந்தநிலையில், விளக்கமறியல் உத்தரவையடுத்து நேற்றைய தினம்...

தன்னைப் பற்றி தவறான விடயங்களை பரப்பி வருகின்றனர்; டிரான் அலஸ்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தான் மறைத்து வைத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் நகைச்சுவையாக உள்ளதாக முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். நாட்டையே சிரிக்க வைக்கும் இது போன்றவர்கள், இவ்வாறான பிரசாரங்களை வெளியிட்டு, தன்னைப் பற்றி தவறான விடயங்களை பரப்பி வருவதாக சமூகத்தை தவறாக வழிநடத்தி வருவதாகவும்...

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தில் நெல் களஞ்சியசாலைகள் க்ளீன்..!

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து, நாடு முழுவதும் உள்ள நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள், இலங்கை இராணுவத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று ஆரம்பிக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி, நெல் சந்தைப்படுத்தல் சபையின் கீழ் உள்ள 209 நெல் களஞ்சியசாலைகள் சுத்தப்படுத்தப்படவுள்ளன. குறித்த களஞ்சியசாலைகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள்...

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு நீக்கம்..!

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படையினர் இன்று முதல் அமுலாகும் வகையில் நீக்கப்படவுள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படையினரை மீளப் பெறுவது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தைக் கடந்த செவ்வாய்கிழமை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான காவல்துறை பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேநேரம் முன்னாள்...

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இன்று செவ்வாய்க்கிழமை (19) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் களனி பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.எஸ்.சி பட்டப்படிப்பை முடித்துள்ளார்.   <!-- -->
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img