Friday, June 5, 2026
No menu items!

பொதுமக்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் வட்டுவாகல் பாலப்பணிகள் தொடக்கம்!

வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இன்று (02) நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலம் பூர்த்தியாவதனை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வடக்குக்கு விஜயம் செய்துள்ளார். நாட்டின் ஜனாதிபதியின் வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று (02) முல்லைத்தீவுக்கு...

நாட்டில் 14,834 சிறார்கள் ஆபத்தான நிலையில் – 15 வயதில் பாதாள உலகில் இழுக்கும் சவால்!

நாட்டில் சுமார் 14,834 சிறார்கள் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயம், கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட பல்துறை போதைப்பொருள் தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அதிகாரிகள், பாதிக்கப்படக்கூடிய சிறார்களின் நலனுக்காக பணியாற்றி வருவதாகவும், குடும்பத்தை...

அஞ்சல் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு: ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அஞ்சல் திணைக்களம் தீர்மானம்!

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் அஞ்சல் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 17 ஆம் திகதி முதல் அஞ்சல் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை,...

யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 79ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் !

இந்தியாவின் 79ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (15) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது. இதன் போது யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டு இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார். தொடர்ந்து இந்திய ஐனாதிபதியின் உரையை துணைத்தூதுவர் சாய் முரளி வாசித்துள்ளார். இந்த நிகழ்வில் துணைத்தூதரக...

பொதுமக்களுக்காக ஒரு புதிய வட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்திய காவல்துறை!

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்காக ஒரு புதிய வட்ஸ்அப் இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, பொலிஸ்மாக அதிபர் பிரியந்த வீரசூரியவினால் குறித்த வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 071 - 8598888 என்ற புதிய வட்ஸ்அப் இலக்கம் இன்று (13) முதல்...

நாட்டில் எலிக்காய்ச்சல் தீவிரம் – பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

நாட்டில் எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இன்று (11) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, இந்த நிலைமை குறித்து அவர் எச்சரிக்கை விடுத்தார். எலிக்காய்ச்சல் பெரும்பாலும் சேற்று நீரினால் பரவுகின்றது. பாடசாலைகள் தற்போது விடுமுறையில் இருப்பதால், சிறுவர்கள்...

இன்றைய நாளுக்கான வானிலை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே இலேசான மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு...

பரந்தன் பகுதியில் டிப்பர் மோதியதில் பெண் உயிரிழப்பு – சாரதி மீது பொதுமக்கள் தாக்குதல்!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தொன்றில் இன்று 31.07.2025 பெண் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது யாதெனில் கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரை பின்னால் வந்த டிப்பர் முந்திச்செல்ல முற்பட்ட வேளையே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து இடம்பெற்ற இடத்தில் விபத்தை ஏற்படுத்திய சாரதி...

கடுமையாகும் ஆசன பட்டி சட்டம்:  போக்குவரத்து அமைச்சர்  எச்சரிக்கை!

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், ஆசன பட்டி (Seat Belt) சட்டத்தை எதிர்காலத்தில் மிகவும் கடுமையாக அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். காலி மாவட்ட போக்குவரத்துக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ஆசன பட்டி அணியாத பேருந்துகளின் உரிமங்களை...

இன்றைய நாளுக்கான வானிலை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது...
- Advertisement -spot_img

Latest News

விடுதலை புலிகள் பாடல் மற்றும் கைது தொடர்பில் பொலிஸார் விளக்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் பாடல்களைப் பாடியதற்காக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்கள்...
- Advertisement -spot_img