Monday, June 15, 2026
No menu items!

மஸ்கெலியா

பொகவந்தலாவ, மஸ்கெலியா தோட்டத் தொழிலாளர்கள்  சம்பள அதிகரிப்பை எதிர்த்த எதிர்க்கட்சியருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா தோட்டத் தொழிலாளர்கள் நேற்றைய தினம் (16.11.2025) அரசாங்கத்தின் 200 ரூபா சம்பள அதிகரிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தோட்டத் தொழிலாளர்கள் நாளாந்த சம்பளத்தை 2026 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இருந்தபோதிலும், எதிர்க்கட்சியினர் இது சட்டவிரோதமான கொடுப்பனவு என குறிப்பிட்டு தடுப்பு முயற்சிகள் மேற்கொண்டனர். இதற்கு எதிராக தொழிலாளர்கள் ஊர்வலமாக...

மஸ்கெலியாவில் தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து – பெரும் சேதம்!

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லதண்ணி, லக்ஷபான தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் இன்று (09) அதிகாலை 1 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தேயிலை தூள் உற்பத்திப் பிரிவில் ஆரம்பமான தீ, தேயிலை இலைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த அறைக்கும் பரவியதால், பொட்டலம் கட்டப்பட்ட தேயிலைத் தூளும் பெருமளவில் எரிந்து நாசமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ...

கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த பேருந்து விபத்து!

கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அவிசாவளை டிப்போ பேருந்தொன்று விபத்துக்குள்ளானது. இச் சம்பவம் இன்று (02) காலை 8.30 மணியளவில் விபத்துக்குள்ளானதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாரே விபத்துக்கு காரணம் என நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்து செங்குத்தான சரிவில் மோதி விபத்துக்குள்ளானதோடு, விபத்து நடந்த நேரத்தில் சுமார்...

நுவரெலியா மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட 18 கட்சிகளின் வேட்புமனுக்கள்!

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 18 அரசியல் கட்சிகள் மற்றும் 8 சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக நுவரெலியா மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 110 வேட்புமனுக்கள் பெறப்பட்டதாகவும், அவற்றில் 18 அரசியல் கட்சிகள் மற்றும் 8 சுயேட்சைக் குழுக்களின்...

தொடர் குடியிருப்பு ஒன்றில் தீப்பரவல் !

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்ட பிரவுன்ஸ்விக் பிரிவில் இலக்கம் ஒன்று தொடர் குடியிருப்பில் நேற்று இரவு 9 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீப்பரவலின் போது நான்குதோட்ட மக்கள் பகுதிகளில் உள்ள கூறைகள் எரிந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார். ஏனைய 12 குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்க தோட்ட மக்கள் மஸ்கெலியா...

முற்றாக எரிந்து நாசமாகியுள்ள தொடர் குடியிருப்புக்கள்..!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுஸ்ஸாகலை தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பில் நேற்று இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். 12 வீடுகள் கொண்ட குடியிருப்பில்  பரவிக்கொண்டிருந்த தீயை, தோட்டத் தொழிலாளர்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளனர். தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை....

மில்லியன் பெறுமதியான வான் ஒன்றை கொள்ளையடித்த நபர் கைது!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் 8.3 மில்லியன் பெறுமதியான வான் ஒன்றை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நவம்பர் 09ஆம் திகதி திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வாகனம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கஹவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓப்பாவத்தை பிரதேசத்தில் வைத்து 28 வயதுடைய இளைஞரொருவரை இது தொடர்பில் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹட்டன் பொலிஸாரின்...

குளவிக்கொட்டுக்கு இலக்காகி 6 பேர் வைத்தியசாலையில்..!

மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவு லக்சபான தோட்டத்தில் இன்று (03.09) தேயிலை கொழுந்து பறிக்க சென்றவர்களில் 6 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கியவர்கள் மஸ்கெலியா லக்சபான தோட்டத்தை சேர்ந்தவர்கள் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தின்போது இவர்கள் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த...

கம்பி வலையில் சிக்கிய சிறுத்தை…!

மஸ்கெலியா,மவுசாகல லக்கம் பிரிவிலுள்ள புதிய பாலத்துக்கு அருகாமையில், சிறுத்தையொன்று கம்பி வலையில் சிக்கியுள்ளது. சிறுத்தை வலையில் சிக்கி இருப்பதைக் கண்ட மக்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவுக்கு தெரியப்படுத்தினர். இதனையடுத்து நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மஸ்கெலியாவில் விபத்து; இருவர் பலி…!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டியும், சிறிய ரக லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்து மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டப் பகுதியில்...
- Advertisement -spot_img

Latest News

என்.டி.பி மோசடி: கண்காணிப்பை பலப்படுத்துமாறு ஐ.எம்.எஃப் தெரிவிப்பு!

தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) பல பில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றதைத் தொடர்ந்து, வங்கி மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை பொறிமுறைகளை பலப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம்...
- Advertisement -spot_img