Saturday, April 18, 2026
No menu items!

முல்லைத்தீவு

நீரில் மூழ்கி இரு மாணவிகள் உயிரிழப்பு!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில், மாணவிகள் இருவர் புகைப்படம் எடுக்கச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் தரம் பத்தில் கல்வி கற்கின்ற மூன்று மாணவிகள் நேற்று (01) மதியம் முல்லைத்தீவு, குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணிக்கு சென்றுள்ளனர். மூவரும் கேணியில் இருந்தபோது இருவர் நீரில் இறங்கி...

தலைதூக்கியுள்ள சட்டவிரோத சுருக்குவலையால் கடலுக்கு செல்வதை நிறுத்திய மீனவர்கள்..!

யாழ். வடமராட்சி கிழக்கு கடற் பகுதியில் தலை தூக்கியுள்ள சட்டவிரோத சுருக்குவலையால் அதிகளவான மீனவர்கள் தொழிலை இழந்துள்ளனர். சட்டவிரோத சுருக்குவலை தொழிலுக்கு நாளாந்தம் அதிகளவான மீன்பிடி படகுகள் சென்று ஐம்பதாயிரம் கிலோவிற்கும் அதிகளவான மீன்களை பிடித்து வருவதால் சிறு தொழிலாளிகள் தங்களின் வருமானத்தை இழந்துள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடியில் அதிகளவான மீன்கள் பிடிபடுவதால்...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு..!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் திங்கட்கிழமை (09.05.2025) நடைபெறவுள்ளது. இந்நிலையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வளாகத்திலுள்ள உணவு கையாளும் வியாபார நிலையங்களுக்கான அறிவுறுத்தல் ஒன்றினை வற்றாப்பளை பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று சனிக்கிழமை (31.05.2025) வெளியிட்டுள்ளனர். குறித்த அறிவுறுத்தலில் உணவகம் , சர்பத் கடை தவிர்ந்த ஏனைய உணவு கையாளும்...

காணாமல் போன தனது தாயை கண்டுபிடிக்க உதவுமாறு மகள் உருக்கமான கோரிக்கை..!

தனது தாயரை கடந்த மாதம் 10ம் திகதியிலிருந்து முல்லைத்தீவு செல்வபுரத்திலிருந்து காணவில்லை என்றும் தனது தாயாரை கண்டுபிடிக்க ஊடகங்கள் உதவ வேண்டும் என்றும் காணாமல் போனவரான சலோமியாம்பிள்ளை மேரி பிலோமினாவின் மகள் முடியழகன் வேணி கோரிக்கை விடுத்துள்ளார். அவர் நேற்று (30/05/2025) கற்கோவளத்திலுள்ள தனது இல்லத்தில் வைத்து நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இக்கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தனது தாய்...

குருந்தூர் மலை விவசாயிகளுக்கு மீண்டும் விளக்கமறியல்!

குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளையும்  ஜூன் 7ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் நேற்று வியாழக்கிழமை (29) உத்தரவிட்டுள்ளார். கடந்த 10ஆம் திகதி  குமுழமுனை தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக விவசாயம் செய்யும் நோக்கில் அக்காணியின் உரிமையாளர் தனது இரு பணியாட்கள் மூலம் உழவு இயந்திரத்தைக் கொண்டு குருந்தூர்...

மர்மமான முறையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு..!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் நேற்று வியாழக்கிழமை (22.05.2025) மாலை புதர் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு, 10வது தொகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. நபர் ஒருவர் புதரில் கிடப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு...

புதுக்குடியிருப்பு பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். குறித்த நபர் நேற்று வயலில் வேலை செய்துகொண்டிருந்த போது மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு, மந்துவில் 8ஆம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உள்ளிட்ட 4 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. மாந்தை கிழக்கு பிரதேச சபை  (ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 1,364...

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெற்று வரும் வாக்களிப்பு நடவடிக்கைகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (06) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி சுமூகமாக இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தலாக இந்த தேர்தல் இடம்பெறுவதோடு மக்கள் காலை 7.00 மணியில் இருந்து வாக்களித்து வருகின்றனர்.

மின்னல் தாக்கம் ஏற்படும் மாவட்டங்கள்; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. அதன்படி ,வடமத்திய மாகாணத்திலும், மாத்தளை, திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img