Tuesday, April 28, 2026
No menu items!

வடக்கு மாகாணம்

வடக்கு மாகாணம் அபிவிருத்தியடைய வேண்டும் – வேதநாயகன் தெரிவிப்பு..!

வடக்கு மாகாணத்தை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்ற வேண்டும். அதற்கு முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் எமது உள்ளூராட்சி மன்றங்களும் மாற்றமடையவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பருத்தித்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் உள்ளூராட்சி மாத நிகழ்வும், வாசிப்பு மாத நிகழ்வும் பண்பாட்டு பெருவிழாவும் பருத்தித்துறை எஸ்.எஸ். மண்டபத்தில் இன்று புதன் கிழமை (11.12.2024)...

வடக்கு மாகாண முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் – நா.வேதநாயகன் தெரிவிப்பு..!

வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், யாழ் வணிகர் கழகப் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். யாழ் வணிகர் கழகம் தலைவர் இ.ஜெயசேகரன் தலைமையிலான குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (29.11.2024) மாலை சந்தித்துக் கலந்துரையாடினர். யாழ். நகரில் அமைந்துள்ள புதிய...

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர்நிலைமை தொடர்பில் ஆராய அவசர கூட்டம் முன்னெடுப்பு..!

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர்நிலைமை தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று (26.11.2024) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இடர் நிலைமை தொடர்பில் ஆராயும் கூட்டம் நாளை (27.11.2024) நடைபெறவுள்ளதாக...

யாழில் மழைக்கு மத்தியிலும் ஆர்வத்துடன் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள்..!

நாடளாவிய ரீதியில், கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று (25.11.2024) ஆரம்பமாகியது. இன்றையதினம் ஆரம்பமாகும் பரீட்சை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை 2 ஆயிரத்து 312 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. இந்தமுறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 3 இலட்சத்து 32 ஆயிரத்து 183 பரீட்சார்த்திகள் தோற்றும் நிலையில், வடக்கு மாகாணத்திலிருந்து 17 ஆயிரத்து...

மீண்டும் வடக்கிற்கான யாழ்தேவி தொடருந்து சேவை..!

தற்போதைய அரச நிர்வாகத்தின் கீழ் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள யாழ் தேவி தொடருந்து சேவைகளை தமது அரசாங்கத்தின் கீழ் மீள ஆரம்பிப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளார். 30 வருட கால போரை முடித்த பின்னர் வடக்கு மாகாணத்திற்கான தொடருந்து பாதைகளை ராஜபக்ச அரசாங்கம் வெற்றிகரமாக நிறுவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வடக்கு...

யாழில் நடைபெற்ற பண்பாட்டுப் பெருவிழா!

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி பிரதேச செயலகமும், தென்மராட்சி கலாசாரப் பேரவையும், சாவகச்சேரி பிரதேச சபையும் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா யாழ். வரணி கலாசார மண்டபத்தில் இன்று(21) இடம்பெற்றது. தென்மராட்சி பிரதேச செயலாளர் உஷா சுபலிங்கம் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ம.பற்றிக்...

வடக்கு மாகாண ஆளுநர் சுகாதார அமைச்சுக்கு விடுத்துள்ள பணிப்புரை!

வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள், அரச மருந்தகங்கள் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல் அடங்கிய பாதாதைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள், மாகாண சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நோயாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், நோயாளர்களும், வைத்தியர்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், சேவையை பெற்றுக் கொள்வதில் தாமதம் அல்லது...

பொருளாதார பரிமாற்றல் சட்டமூலம் மற்றும் அரச நிதி முகாமைத்துவ சட்ட மூலம் ஆகிய சட்ட மூலங்களை பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும்..!

பொருளாதார பரிமாற்றல் சட்டமூலம் மற்றும் அரச நிதி முகாமைத்துவ சட்ட மூலம் ஆகிய சட்ட மூலங்களை பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் ஜனாதிபதியின் வேலைத்திட்டம் நேற்று யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த உயர்தரத்தில் கணித, விஞ்ஞான, வணிக மற்றும் கலைத்துறைகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதன்போது...

  வேலையில்லா பட்டதாரிகள் யாழில் வீதியில் இறங்கிப் போராட்டம்…

வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் நேற்று(09.06.2024) காலை கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இப்போராட்டத்தில் பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடு ரோட்டில், ஒரே  ஒரு   பரீட்சையில்  பறந்து போனது பல பரீட்சை எழுதிப் பெற்ற பட்டம், படிப்பிற்க்கும் போராட்டம் வேலைக்கும் போராடுவதா? , எல்லோருக்கும் பாரபட்சமின்றி வேலைகளை வழங்க...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28)...
- Advertisement -spot_img