Tuesday, June 9, 2026
No menu items!

வெலிமடை

வெலிமடையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் தம்பதியினர் அடித்துச் செல்லப்பட்ட துயரச் சம்பவம்!

வெலிமடை – பொரலந்த – கண்டேபுஹுல்பொல பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் திருமணமான தம்பதியினர் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெலிமடை பிரதேச செயலகப் பிரிவில் நேற்று (17) மாலை பெய்த கனமழையால் இந்த துயரச் சம்பவம் ஏற்பட்டது. சம்பவத்துக்குப் பிறகு அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன்போது பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள்...

Ez Cash முறையை பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை – 50 வயது பெண் கைது..!!

நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல பகுதிகளில் ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாக சந்தேகிக்கப்படும் 50 வயதுடைய பெண் ஒருவர், “மஹரகம அக்கா” என்ற பெயரில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இக்கைது நுவரெலியா பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சுற்றிவளைப்பின் போது இடம்பெற்றுள்ளது. இச்...

தக்காளி விலையில் வீழ்ச்சி; பொருளாதார நெருக்கடியில் சிக்கிய விவசாயிகள்!  

தக்காளி விலை சந்தையில் வேகமாக வீழ்ந்துள்ளதால், பல பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். தற்போது, ஒரு கிலோகிராம் தக்காளி ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே வர்த்தகர்களால் கொள்வனவு செய்யப்படுகின்றது என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். வெலிமடை, எல்ல, அடம்பிட்டி, நெலுவ, ஹாலிஎல, பண்டாரவளை உள்ளிட்ட பிரதேசங்களில் தற்போது தக்காளி அறுவடை நடைபெற்று வருகின்றது. இருப்பினும்,...

கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று விபத்து!

வெலிமடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுகதலாவ பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர். வெலிமடையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது  இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை...

ஜனாதிபதிக்கு ஆதரவளித்த தலதா அத்துகோரள!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் எஸ்.ஜே.பி பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள வெலிமடையில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டுள்ளார். சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் விசேட அறிக்கையில் கவலை தெரிவித்த அவர், ஆகஸ்ட் 21 ஆம் திகதி தனது பாராளுமன்ற உறுப்பினர்...

கணவனால் மனைவி மீது துப்பாக்கிச் சூடு….!

பசறை வீதி ஹிந்தகொட பகுதியில் பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்தவர் கரகஹ உல்பத,வெலிமடை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவராவார். காயமடைந்த பெண் பதுளை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த பெண்ணின் கணவரே துப்பாக்கிச்...

போதைப்பொருள் பொதிகளுடன் ஒருவர் கைது…!

1460 ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பொதிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் தனது சகோதரிக்கு பிறந்தநாள் பரிசாக கொடுக்கும் போர்வையில் போதைப்பொருளை பார்சல் செய்து விநியோகித்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மவுண்ட் பகுதியில் வசிக்கும் 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. பண்டாரவளை, ஹப்புத்தளை,...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img