Sunday, June 7, 2026
No menu items!

வெளிநாட்டவர்

வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதி – மருத்துவ சங்கத்தின் கடும் எதிர்ப்பு!

வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதி வழங்கும் அரசாங்கத் தீர்மானத்தை இலங்கை மருத்துவ சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது. இலங்கை மருத்துவ சங்கம் வெளியிட்ட அறிக்கையில், இத்தகைய அனுமதி கடுமையான சுகாதார, சமூக மற்றும் பொருளாதார அபாயங்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பயன்பாட்டிற்காக கஞ்சாவை பயிரிடுவதை நியாயப்படுத்துவது தவறானது என்றும் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டிலிருந்து...

முச்சக்கர வண்டிகளை செலுத்தும் வெளிநாட்டவர்களினால் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்!

நாட்டில் முச்சக்கர வண்டிகளை செலுத்தும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, விபத்துக்கள்  மற்றும் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. விபத்துக்களில் சிக்கும் பல வெளிநாட்டவர்களிடம் முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் இருப்பது விசாரணையில்  தெரிய வந்துள்ளது. முறையான பயிற்சி இல்லாததே இந்த விபத்துக்கள் இடம்பெறுவதற்கு காரணமாக உள்ளது. இலங்கையில் சட்டபூர்வமாக...

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் 10 வெளிநாட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை!

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் 10 வெளிநாட்டவர்களுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு 146 கிலோ ஹெராயின் கடத்தல் மற்றும் வைத்திருந்த குற்றத்திற்காக இந்த குழுவிற்கு தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் அனைவரும் ஈரானிய பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் நீந்திய வெளிநாட்டவர் உயிரிழப்பு!

மலேசிய பிரஜை ஒருவர் நேற்று மாலை உனவடுனா கடற்கரையில் கடலில் நீராடச் சென்ற போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 61 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த வெளிநாட்டவர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள நீரோட்டத்தினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர். அவர் உயிர்காப்பாளர்களால் மீட்கப்பட்ட போதிலும், மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.  
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img