Thursday, May 14, 2026
No menu items!

வெள்ளம்

வெள்ளப்பெருக்கு காரணமாக 7 பேர் காணாமல் போயுள்ளனர்!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 7 பேர் காணாமல் போயுள்ளனர். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, நேற்று காரைதீவில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணித்தவர்களே காணாமல் போயுள்ளனர். சம்பவத்தின் போது உழவு இயந்திரம் 11 பாடசாலை...

மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குமாறு ரிஷாட் கோரிக்கை…!

மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை முன்னெடுக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றைய தினம் திங்கட்கிழமை (25.11.2024) வெள்ளம் ஏற்பட்டுள்ள இடங்களுக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மக்களுடன்...

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் பிற அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக, அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசங்களில் இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள் தங்களுக்குரிய பரீட்சை நிலையத்திற்குச் செல்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால், அருகிலுள்ள பரீட்சை நிலையத்திற்குச் செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர...

கடும் மழை காரணமாக கிளிநொச்சியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

தற்பொழுது பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் உள்ள தாழ் நிலப்பகுதியில்  இருப்பவர்கள் சிலர் தமக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நாளாந்த செயற்பாட்டை முன்னெடுக்க முடியாத நிலையில் வெள்ளம் வீட்டை சூழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் பெய்த கடும் மழை காரணமாக மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்நுழைந்த முதலை...

மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று பார்வையிட்ட செல்வம் அடைக்கலநாதன்..!

மன்னார் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (23.11.2024) இரவு வரை பெய்த கடும் மழை காரணமாக 2045 குடும்பங்களை சேர்ந்த 7778 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல்வேறு கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதோடு,மக்கள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்துள்ளதோடு,தற்காலிக முகாம்களிலும் தங்க...

அக்குறனை நகரம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பு…!

கண்டி மாவட்டத்தில் உள்ள சில பிரதேசங்களில் பெய்த கடும் மழை காரணமாக கண்டி – யாழ்ப்பாணம் ஏ – 09 வீதியில் உள்ள அக்குறனை நகரம் நேற்று வெள்ளிக்கிழமை (15.11.2024) வெள்ளத்தில் மூழ்கியது. இதன் காரணமாக அக்குறனை நகரத்தில் பல மணித்தியாலங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், அக்குறனை நகரம் ஒரு மாத காலப்பகுதிக்குள் மூன்று முறை இவ்வாறு வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை…!

சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நிலவும் மழையுடனான...

மன்னாரில் கடும் மழை; வெள்ள நீரில் மூழ்கிய கிராமங்கள்…

மன்னார் மாவட்டத்தில் நேற்று (23.10) புதன் இரவு முதல் இன்று வியாழன் (24.10) காலை வரை பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல  பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குறிப்பாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாந்திபுரம்,சௌதார்,எழுத்தூர் ,மூர்வீதி உள்ளடங்கலாக பல கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் எழுத்தூர் பகுதியில் உள்ள 30 குடும்பங்களின் வீடுகளுக்குள்...

பொதுமக்கள் தங்கள் சுகாதாரம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை!

சமீபத்திய வெள்ளத்தைத் தொடர்ந்து தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHIs) சங்கம் கவலை தெரிவித்துள்ளது. வெள்ளநீருக்கு வெளிப்படும் நபர்கள் வயிற்றுப்போக்கு, லெப்டோஸ்பிரோசிஸ் மற்றும் புழு தொல்லை போன்ற நோய்களுக்கு குறிப்பாக பாதிக்கப்படுகின்றனர் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் சந்துன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந் நோய் அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால், உடனடியாக...

மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் நாளை திறப்பு!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் இரண்டு மாகாணங்களில் பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் நாளை (ஒக்டோபர் 16) திறக்கப்படும் என மாகாண கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடமாக பயன்படுத்தப்படும் பள்ளிகள் மூடப்படும் என்று அவர்கள் மேலும்...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு...
- Advertisement -spot_img