Saturday, July 11, 2026
No menu items!

வேலைவாய்ப்பு

செயற்கை நுண்ணறிவின் தாக்கம்:– ஐ.நா. ஆய்வு எச்சரிக்கை!

உலகளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது வேலைவாய்ப்புகளை பெரிதும் பாதிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபை (UN) நடத்திய சமீபத்திய ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அனைவரிடமும் நவீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் உள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு பெரிதும் பரவிவருகிறது. இதன் விளைவாக மனிதர்களின்...

அரசாங்க நவீனமயத்திற்காக 62,000 பேரை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அனுமதி – ஜனாதிபதி!

அரசாங்கத்தை நவீனமயமாக்குவதே தனது இலக்காக இருப்பதாகவும், அதற்காக சுமார் 62,000 அரச ஊழியர்களை உடனடியாக ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் தேசிய இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். "எங்கள் அரசாங்கம் வேலை வழங்கும் மையமல்ல, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மையமாகும். அரச சேவையானது பொருளாதாரத்தையும் சமூக நிறுவனத்தையும் கட்டமைக்கும் திறன் கொண்டதாக...

கொழும்பில் பிரம்மாண்ட கட்டடத் திட்டம்: 25 ஆண்டுகள் வரி விலக்குடன் 540 மில்லியன் டொலர் முதலீடு!

கொழும்பு துறைமுக நகரத்தில் 540 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான முதலீட்டில் ஒரு பெரிய அளவிலான கட்டுமானத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டின் நோக்கம், லண்டனின் பிக் பென்னால் ஈர்க்கப்பட்ட 15 மீட்டர் பிரம்மாண்ட கடிகாரத்துடன் கூடிய உலகின் மிகப்பெரிய கலைப் படைப்பாக மாறக்கூடிய ஒன்றைக் காண்பிப்பதாகும். மேலும் இது கின்னஸ் உலக சாதனைகளின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும்...

E-8 விசா மோசடி குறித்து வெளியான எச்சரிக்கை..!

தென் கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்புகளை வழங்க அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும், இந்த வேலைவாய்ப்புகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் மட்டுமே வழங்கப்படும் என்றும் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தென் கொரியாவில் E-9 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்கள் குழுவிற்கு விமான டிக்கெட்டுகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்...

முச்சக்கர வண்டி கொள்வனவாளர்களுக்கு அதிர்ச்சித் தகவல்..!

முதல் தொகுதி வாகனங்களைப் பெற்ற பின்னர் புதிய பஜாஜ் ஆர்.இ முச்சக்கர வண்டி, பத்தொன்பது இலட்சத்து தொன்னூற்று ஐயாயிரத்திற்கு (1,995,000) விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனம் தங்களிடம் தற்போது புதிய வாகனங்கள் இல்லை என்றாலும் முன்பதிவுகள் திறந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. பஜாஜ் முச்சக்கர வண்டிகள் இலங்கையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாகனங்களில் ஒன்றாகும்.

தனது சகோதரர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் மௌனம் கலைத்த மனுஷ நாணயக்கார!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, தான் அமைச்சராக இருந்த காலத்தில் தமக்கு எதிராக முதலில் முறைப்பாடு செய்ததாகக் கூறி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊழல் தொடர்பில் தனது சகோதரர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் மௌனம் கலைத்தார். தனது சகோதரரின் செயற்பாடுகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று கூறிய நாணயக்கார, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக மூன்றாம் நபர்களுக்கு பணம் கொடுப்பதற்கு...

வெளிநாடு செல்லும் இலங்கையர்களின்  எண்ணிக்கை அதிகரிப்பு…!

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின்  எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளதாவது, செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 28,344 பேர் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளனர். அதற்கிணங்க வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின்...

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு தொடர்பான இணக்கப்பாடு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளார்ந்த சம்பளம்  மற்றும் உற்பத்தித்திறன் அடிப்படையில் வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கு நேற்று கூடிய 09 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன என  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்  மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை   அதிகரிப்பதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்து அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்...

பிரித்தானிய உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்…!!

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களை, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் உள்ளிட்ட குழுவினர் நேற்று (26.06) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்ற நிலையில் மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, தொழில் வாய்ப்புகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது...

ஆபத்தில் சிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு ஏதேனும் ஆபத்து அல்லது அசௌகரியம் ஏற்பட்டால், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு ஒரே நேரத்தில் அறிவிக்கும் திறன் கொண்ட டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய உலகிற்கு ஏற்ற வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கு இது...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையின் இரண்டாவது பாரிய குடிநீர் திட்டம் அனுராதபுரத்தில் ஆரம்பம்

அனுராதபுர வடக்கு குடிநீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று(10) ஆரம்பித்து வைத்தார். இதன் மூலம் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள சுமார் 67,000...
- Advertisement -spot_img