Saturday, April 18, 2026
No menu items!

வைத்தியர்

வைத்தியர்களின் வேலைநிறுத்தம் நிறைவு…!

கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் நேற்று (01.11.2024) பி.ப. 5 மணி முதல்  24 மணித்தியாலங்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் வைத்தியசாலையின் சில வைத்தியர்களை அச்சுறுத்தியதாகக் கூறி அவர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். எவ்வாறாயினும், கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளருடன் இன்று (2) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர்,...

இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய மன்னார் நீதவான் உத்தரவு…

மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இன்றைய தினம் புதன்கிழமை(30) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலை யாகாத   சாவகச்சேரி வைத்திய சாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா வை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதவான்   போலிஸாருக்கு உத்தரவிட்டார். மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையினுல் அத்துமீறி நுழைந்தமை மற்றும் நிர்வாக செயல்பாடுகளுக்கு தடை...

வைத்தியர் அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு!

வைத்தியர் அர்ச்சுனாவை கைது செய்யுமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலைக்குள் புகுந்து ரௌடித்தனத்தில் ஈடுபட்ட அர்ச்சுனா மன்னார் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு இன்று (30) விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வைத்தியர் அர்ச்சுனா மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை. வைத்தியர் அர்ச்சுனாவுக்கு மனஅழுத்தம், தேர்தல் பரப்புரையில் தீவிரமாக உள்ளார் என அவரது சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர். வைத்தியர்...

அதிகரித்துள்ள நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 40 வயதைக் கடந்த நான்கு பேரில் ஒருவர் நீரிழிவு நோயினால் பாதிப்புக்குள்ளாவதாக இலங்கை மருத்துவர் சங்கத்தின் உறுப்பினர் பேராசிரியர் வைத்தியர் மந்திக்க விஜேரட்ன தெரிவித்துள்ளார். அண்மையில் முன்னெடுக்கப்பட்ட புதிய ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அதிகமான நீரிழிவு...

பன்றிகளை ஏற்றிச் செல்லும் போது கால்நடை சுகாதார சான்றிதழ் கட்டாயம்!

பன்றிகளை ஏற்றிச் செல்லும் போது கால்நடை சுகாதார சான்றிதழை கட்டாயமாக்க கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. தற்போது இலங்கையில் பன்றிகள் மத்தியில் பரவும் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பண்ணை உரிமையாளர்கள் கால்நடை சுகாதார சான்றிதழை அந்தந்த கால்நடை வைத்தியர்களிடம் பெற்றுக்கொள்வது கட்டாயமாகும். சுகாதார சான்றிதழ் இல்லாமல் பன்றிகளை கொண்டு...

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் பதவியேற்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை ரன்ன மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான வைத்தியர் நஜித் இந்திக்க, கொழும்பு மருத்துவ பீடத்தில் தனது மருத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். கடந்த 05 வருடங்களில் பல அரச வைத்தியசாலைகளில் வைத்தியராகவும் வைத்திய அதிகாரியாகவும்...

பதவிப்பிரமாணம் செய்துகொண்ட சீதா அரம்பேபொல!

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இவர் இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திலே பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். சீதா அரம்பேபொல, சுகாதார இராஜாங்க அமைச்சராக வகிக்கும் பதவிக்கு மேலதிகமாக, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிண்ணம் சின்னத்தில்  புதிய அரசியல் கூட்டணி!

ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அரசியல் சக்தி தலைத்தூக்கியுள்ளதாகவும் ஜனநாயகத்தை பாதுகாக்கவே புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபித்துள்ளோம் என பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இதேவேளை, 69 இலட்ச மக்களாணை எம்முடன் தான் உள்ளதென்றும் தேசிய கூட்டணியாக எழுச்சிப் பெறுவோம் என்றும் ரமேஷ் பத்திரண மேலும் தெரிவித்துள்ளார். மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர்...

யாழில் உள்ள மருந்தகத்தில் நடந்தது என்ன – வைத்தியர் விளக்கம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் மரணச்சடங்கு இடம்பெற்றதாகவும், ஆகையால் மருந்துகள் சரியான களஞ்சியப்படுத்தல் இன்றி இடம் மாற்றப்பட்டதாகவும், அத்துடன் மருந்தகத்தில் மரணச்சடங்கு நடைபெற்ற தினத்தில் வியாபாரம் இடம்பெற்றதாகவும் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதுகுறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை குறித்த மருந்தகத்தின் உரிமையாளரின் கணவரான வைத்தியர் யோகானந் அவர்கள் நேற்றையதினம் (25)...

வைத்தியர் அர்ச்சுனா வைத்தியர்களுக்குரிய வைத்தியசாலை தங்குமிட விடுதியை மீள ஒப்படைக்கவில்லை!

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் மத்திய சுகாதார அமைச்சிற்கு அழைக்கப்பட்டுச்  சென்றுள்ள போதிலும் இன்று வரை வைத்தியர்களுக்குரிய வைத்தியசாலை தங்குமிட விடுதியை மீள ஒப்படைக்கவில்லை. இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என தெரிவித்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்,நாம் வலிந்து தொழிற்சங்கப் போராட்டத்திற்குத் தள்ளப்படுவோம் என...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img