ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகச் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்தும், ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் ஊடாக கடமையைச் செய்யத் தவறியதாக முன்னதாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து குறித்த இருவரும் முன்னதாக விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் விடுவிக்கப்பட்டமைக்கு எதிராகச் சட்டமா அதிபரால் மொழிமூல சாட்சியங்களை அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, சம்பந்தப்பட்ட வழக்கு நேற்று மேல்நீதிமன்ற நீதியரசர்களான நாமல் பலல்லே மற்றும் மொஹமட் இர்ஷதீன் ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதற்கமைய, அண்மையில் உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்ட வழக்குத் தீர்ப்பு, பிரதிவாதிகளுக்கு வாசித்துக் காண்பிக்கப்பட்டதுடன் வழக்கு 28 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.