இவ்வாண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான அச்சுப் பணிகள் நாளை(16.08) ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச அச்சக அலுவலர் கங்கா கல்பானி லியனகே தெரிவித்துள்ளார்.
இன்று(15.08) வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தவுடன் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலைத் தொடர்ந்து இது வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், 2019 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்துடன் ஒப்பிடுகையில், வாக்குச் சீட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இடம்பெறாது என அரச அச்சக அலுவலர் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








