ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, சவால்களை வெற்றிகொள்வதற்கும் கொள்கை சார்ந்த அரசியலை கடைப்பிடிப்பதற்கும் தனது அர்ப்பணிப்பை வலியுறுத்தியுள்ளார்.

2005 மற்றும் 2015 க்கு இடையில் அமுல்படுத்தப்பட்ட விவசாயக் கொள்கைகளை நவீனமயமாக்குவதற்கு தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்வேகத்தைப் பெற்ற நாமல் உறுதியளித்துள்ளார்.

விளைச்சலை அதிகரிக்கவும், தொழில்நுட்ப ஆர்வமுள்ள விவசாயிகளின் தலைமுறையை உருவாக்கவும் விவசாயத்துடன் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் தனது பார்வையை ராஜபக்ச எடுத்துரைத்தார்.

சமுர்த்தி இயக்கத்தின் ஊடாக பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் எல்லைக் கிராமங்கள் உருவாகுவதை தடுக்கவும் தமது அரசாங்கம் கவனம் செலுத்தும் என உறுதியளித்துள்ளார்.

மேலும் மாகாண சபைகளுக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்க மாட்டோம் எனவும் அரச சொத்துக்களை விற்காமல் அதிக வரி சுமையை குறைப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

“நாங்கள் அரசியலில் இருக்கும் வரை எல்லைக் கிராமங்களை உருவாக்க இடமளிக்க மாட்டோம். மாகாண சபைகளுக்கு காணி உரிமை மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க மாட்டோம். எமது அறிக்கைகளை நேரடியாகக் கூறுகின்றோம். எம்மால் என்ன செய்ய முடியுமோ அதற்கு ஆம் என்று கூறுகின்றோம். எங்களால் என்ன செய்ய முடியாது என்று நாமல் ராஜபக்ஷ கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here