இலங்கையில் கீரி சம்பா அரிசிக்கு மாற்றாக பொன்னி சம்பா அரிசி (GR 11) இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இறக்குமதி நடவடிக்கை 2025 அக்டோபர் 15 முதல் 2025 நவம்பர் 15 வரை நடைபெறவிருக்கிறது.
உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமங்களைப் பெற வேண்டிய தேவையிலிருந்து பொன்னி சம்பா அரிசி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை வேளாண்மை, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாடு அமைச்சர்கள் இணைந்து முன்மொழிந்துள்ளனர்.
இந்த தீர்மானத்தின் மூலம் சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு நிலவும் தட்டுப்பாட்டை குறைத்து, அரிசி விநியோகம் மற்றும் விலை நிலைமை மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது.








