சிறுவர்கள் மற்றும் முதியோரின் உரிமைகள் மற்றும் நலனுக்காக அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

உலக சிறுவர்கள் தினம் மற்றும் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இந்த கருத்துகளை தெரிவித்தார்.

“ஒரு நாட்டின் மக்கள் தொகையில் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் கணிசமான சதவிகிதத்தில் உள்ளனர். இவர்களின் நலனுக்காக அரசாங்கமாக நாங்கள் தொடர்ச்சியாக செயலாற்றி வருகிறோம். சிறுவர்களின் உலகம் அழுக்கற்றதும் அற்புதமானதும் ஆக இருப்பதால், அவர்களுக்கு தடையற்ற வாய்ப்புகளை வழங்குவது சமூகத்தின் பொறுப்பாகும்,” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

“சிறுவர்கள் என்பது யார் என்பதை நடைமுறை மற்றும் விரிவான முறையில் வரையறுக்கும் வழியாக, கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் முக்கிய தலையீடுகளை எடுத்து வருகிறோம்.

எந்த ஒரு பிள்ளையும் இனம், பொருளாதாரம் அல்லது பிற காரணிகளால் கல்வியை இழக்கக் கூடாது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், ஒட்டிசம் உள்ளிட்ட வளர்ச்சி குறைபாடுகள் உள்ள பிள்ளைகளுக்கான சேவைகளை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.”

மேலும், இந்த ஆண்டிற்கான உலக சிறுவர்கள் தினம் “உலகை வழிநடத்த – அன்பால் போஷியுங்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ், பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சினால் கொண்டாடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறுவர்களின் புன்னகை நாட்டின் நம்பிக்கையும், முதியோர்களின் பங்களிப்பு நாட்டின் வளமும் என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here