பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பில் அரசாங்கம் உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை வழங்கி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் ஜீவன் தொண்டமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டயகம பகுதியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஜனாதிபதி இன்றுவரை மலையக மக்களைப் பற்றி எதுவுமே பேசாமல், ஏனையோருக்குச் சலுகைகளை வழங்குகின்றார் என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.






