கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று கடந்த 21 ஆம் திகதி இரவு பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தபோது, மன்னார் – மதவாச்சி பிரதான வீதியின் பெரிய கட்டு பகுதியில் நேற்று (22) விபத்துக்குள்ளானது.

பரைய நாளன் குளம் பொலிஸ் பிரிவின் பிராந்தியத்திற்குள் இடம்பெற்ற இந்த விபத்தில், சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் பலர் காயமடைந்ததுடன், அவர்கள் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் மன்னார் முருங்கன் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் விசாரணைகள் பரைய நாளன் குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here