தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான ரஜினிகாந்த், விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றமை குறித்தும் தன் மீதான சமீபத்திய ஊடக ஊகங்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவும் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் மாற்றத்தால் தான் “மிகுந்த ஆச்சரியம்” அடைந்ததாக அவர் கூறியுள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது பேசிய ரஜினிகாந்த், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடனான தனது சமீபத்திய சந்திப்பு குறித்த விமர்சனங்களுக்கும் பதிலளித்தார்.
இந்த சந்திப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டதோ அல்லது விஜய்யின் வளர்ச்சியுடன் தொடர்புடையதோ அல்ல எனவும் தனது நீண்டகால நட்பை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாநிலத்தின் உயரிய அரசியல் பதவிக்கு விஜய் அமர்ந்ததில் தனக்கு வருத்தமோ அல்லது பொறாமையோ இருப்பதாகக் கூறப்படும் ஊகங்களை ரஜினிகாந்த் மேலும் நிராகரித்தார். தனது தனிப்பட்ட நேர்மையை அவர் வலுவாக எடுத்துரைத்தார்.
தனது கட்சியை வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு வழிநடத்திய விஜய், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சில நாட்களுக்குப் பிறகு இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இது தமிழகத்தின் சமீபகால வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் மாற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.







