இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) தலைவர் செனேஷ் திஸாநாயக்க அண்மையில் வெளியேறியதைத் தொடர்ந்து, ஒரு மாதத்திற்குள் அரச நிறுவனத் தலைவர் ஒருவர் ராஜினாமா செய்த இரண்டாவது நிகழ்வாக இது காணப்படுகிறது.








