இனம் காண முடியாத நோய் தாக்கத்தின் காரணமாக ஐந்து ஏக்கர் சம்பா நெற்செய்கைமுற்று முழுதாக அழிவடைந்து உள்ளது.
புளியம் பொக்கனை கமநலசேவை பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனை சின்னவரணி என்னும் பகுதியில் பெரும்போக சம்பா நெற்செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவரது நெற் செய்கையில் 70 நாட்கள் கடந்த நிலையில் இனங்கான முடியாத நோய் தாக்கம் காரணமாக ஐந்து ஏக்கர் அளவில் சம்பா நெற்செய்கை முற்று முழுதாக அழிந்து நீரில் கரைந்து உள்ளது.
இது தொடர்பாக எமது பகுதி விவசாய அமைப்புகள் மற்றும் கமநல சேவை திணைக்களத்தினர் எமது பகுதிக்கு வருகை தந்து எனது நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள அழிவுக்கான காரணத்தினை கண்டறிய வேண்டும் எனவும் இந்நிலை தொடருமாயின் இனி வரும் காலங்களில் நெற்செய்கை மேற்கொள்வது மிகவும் கடினமாக அமையும் எனவும் தற்பொழுது நாட்டில் அரிசி பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தனக்கு ஏற்பட்டுள்ள அழிவினை நிவர்த்தி செய்ய முடியாத நிலையில் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதாக விவசாயி கவலை தெரிவித்துள்ளார்.
[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








