சட்டத்தரணிகள் மற்றும் வைத்தியர்களின் வாகனங்களில் உள்ள அடையாள சின்னங்களை அகற்ற அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (21) தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, ‘அவ்வாறு செய்யும் எண்ணம் இல்லை’ என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சுகாதார அமைச்சர், மருத்துவத் துறையில் அடையாள சின்னங்கள் தேவையானவை என்றும், அவற்றை அகற்றுவதற்கான திட்டம் எதுவும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.








