Saturday, June 27, 2026
No menu items!

Monthly Archives: November, 2024

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை – உபாலி பன்னிலகே தெரிவிப்பு..!

மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளதாக சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார். ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக ஆராய்வதற்காக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி...

சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விற்பனையில் வீழ்ச்சி!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு பெறப்படும் மரக்கறிகளின் தொகை 60 % வீழ்ச்சியடைந்துள்ளதுடன், மரக்கறிகளை கொள்வனவு செய்ய வரும் விற்பனையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு குறைந்து, மரக்கறிகளின் விலையும் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக பொருளாதார மைய வர்த்தகர்கள் சங்கம் கூறுகிறது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின்...

சீரற்ற காலநிலை தொடர்பில் ஆராய மன்னாரில் கூடிய விசேட ஒருங்கிணைப்புக் குழு..!

மன்னார் மாவட்டத்தில்  கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாகவும், ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும்  ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வியாழக்கிழமை (28.11.2024) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த கூட்டமானது  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில்...

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 27 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியா - சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மேடான் நகரத்திலிருந்து பெரஸ்டாகி நகர் செல்லும் வீதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவின் போது சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றின் மீது மரங்கள், மண்மேடு மற்றும் பாறைகள் விழுந்துள்ளன. இந்த...

அதிகரித்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,776,889 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 357,279 ஆகும். இது தவிர, ரஷ்யா, ஜேர்மனி, பிரிட்டன், அவுஸ்திரேலியா, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக...

யாழில் உலங்கு வானூர்தி மூலம் வைத்தியசாலைக்கு நோயாளர்கள் அனுப்பி வைப்பு..!

நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 3 நோயாளர்கள் மேலதிக சிகிச்சையளிக்கும் வகையில் விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு நேற்றையதினம் (28.11.2024) அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நெடுந்தீவில் இருந்து 3 நோயாளர்களும் அவர்களது 3 உதவியாளர்களும் உலங்கு வானூர்தி மூலம் பலாலி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு தரைவழியாக கொண்டுசென்று யாழ்...

இந்திய வேகப்பந்து வீச்சாளர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் 2018ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக இந்தியாவுக்காகத் தனது இருபதுக்கு 20 சர்வதேச போட்டியில் அறிமுகமானார். அதே ஆண்டு, இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டியில் அறிமுகமானார். ஐ.பி.எல் தொடர்களில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு அணிகளில் விளையாடி உள்ளார். இந்நிலையில்,...

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.80 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.28 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை...

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது..!

கடந்த சில காலமாக பல்வேறு விதமான திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் புதன்கிழமை (27.11.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்ணகி நகர் பகுதியில் உறவினரின் வீட்டுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த பெண்ணிடம் கொட்டும் மழையில் வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த பெண் அணிந்திருந்த தாலியினை அறுத்து தப்பிச்செல்ல முற்பட்ட வேளை...

அமைச்சுக்களுக்குச் சொந்தமான அதி சொகுசு வாகனங்கள் ஏலத்துக்கு!

அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று சொகுசு வாகனங்கள் ஏலம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இந்த சொகுசு வாகனங்களைப் பராமரிக்க அரசாங்கம் பாரிய செலவைச் சுமக்க வேண்டியுள்ளதுடன், இவற்றில்...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img