Saturday, June 27, 2026
No menu items!

Monthly Archives: November, 2024

விளையாட்டு நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகளை நேரடியாகத் தெரிவிக்குமாறு விளையாட்டுத் துறை அமைச்சர் தெரிவிப்பு!

விளையாட்டு நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் நேரடியாகத் தெரிவிக்குமாறு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். சுகததாச தேசிய விளையாட்டு வளாக அதிகாரசபையில் நேற்று (28) காலை பார்வையிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, இளைஞர் விவகார பிரதி...

மட்டக்களப்பில் வீதியில் அடியோடு சரிந்து வீழ்ந்த பாரிய மரங்கள்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீசிய பலத்த காற்றினால் நகரிலுள்ள காந்திபூங்கா, மற்றும் கந்தையா சிறுவர் பூங்காவில் உள்ள மரங்கள் வியாழக்கிழமை (28.11.2024) பகல் 12 மணியளில் அடியோடு சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளது. இந்நிலையில், தீயணைப்பு படையினர் அவற்றை வெட்டி அகற்றியுள்ளனர். மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பது தூதுவர்கள்!

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பது தூதுவர்களும் ஒரு உயர் ஸ்தானிகரும்  நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 28) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ்களை உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளனர். புதிய தூதர்கள் புர்கினா பாசோ, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, அஜர்பைஜான் குடியரசு, ஜார்ஜியா, பெலாரஸ் குடியரசு, ஆர்மீனியா குடியரசு, ஸ்பெயின் இராச்சியம், காங்கோ குடியரசு மற்றும்...

இரத்தினபுரி மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு; நேரடியாக சென்று பார்வையிட்ட பிரதி அமைச்சர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்ட பெருந்தோட்ட பிரதேசங்களுக்கு பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு  பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஏனைய வசதிகளை பெற்றுக் கொடுக்க சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு பணிப்புரையும் விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகக் கோரப்பட்ட வேட்பு மனுவை இரத்து செய்ய வேண்டும்; சாகர காரியவசம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகக் கோரப்பட்ட வேட்பு மனுவை இரத்து செய்து மீண்டும் புதிய வேட்பு மனு கோரப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற அங்கத்தவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போது அவர்...

இன்றைய நாளுக்குரிய வானிலை!

திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையில் இருந்து சுமார் 290 கிலோ மீற்றர் தொலைவிலும் நிலை கொண்டிருந்த சக்திமிக்க தாழமுக்கமானது தமிழ் நாட்டுக் கரையை நோக்கி நகர்ந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், நாட்டின் வானிலையில் காணப்படும் தாக்கமானது இன்று (29) முதல் படிப்படியாக குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வடமாகாண பிரதம செயலாளர் விஜயம்..!

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வடமாகாண பிரதமர் செயலாளர் இளங்கோவன் அவர்களும் வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி சுதாகரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன், மாவட்ட நீர்ப்பாசன எந்திரி வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். கிளிநொச்சி மாவட்டத்தில்  வெள்ள அனர்த்தத்தின் காரணமாக 3812 குடும்பங்களைச் சேர்ந்த 11,728அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13...

மட்டுப்படுத்தப்பட்டுள்ள அஞ்சல் தொடருந்து சேவை !

சீரற்ற காலநிலை காரணமாகக் கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலான இரவு நேர அஞ்சல் தொடருந்து சேவை இன்று (28) பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்படும் எனத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், இரவு நேர நீண்ட தூரத் தொடருந்து சேவைகளைத் திட்டமிட்டபடி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

வீட்டினுள் புகுந்த சிறுத்தை..!

முல்லைத்தீவு, விசுவமடு - இளங்கோபுரம் பகுதியில் சிறுத்தை ஒன்று வீடு ஒன்றிற்குள் புகுந்த சம்பவம் நேற்று (27.11.2024) பதிவாகியுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விசுவமடு, இளங்கோபுரம் கிராமத்தில் திடீரென சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் உள்நுழைந்துள்ளது. இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து திணைக்களத்தின் அதிகாரிகள் குறித்த சிறுத்தையை மீட்டு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில், தற்போது நிலவும் சீரற்ற...

காதலை உறுதிப்படுத்திய கீர்த்தி சுரேஷ்- ஒற்றை புகைப்படத்தால் முடிவுக்கும் வரும் வதந்திகள்..!

காதலை உறுதிப்படுத்தி கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷிற்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் என கோலிவுட்...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img