எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கைகள் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பேச ஆரம்பித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

முன்னர் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டியவராக அறியப்பட்ட கம்மன்பில தற்போது அரசியல் ரீதியாக செல்லுபடியற்றவராக மாறியுள்ளதாக NPP யின் கண்டி மாவட்ட தலைவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஒக்டோபர் 21) கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லால்காந்த, இந்த ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கைகள் கம்மன்பிலவிடம் இருந்திருந்தால், பொறுப்பான அரசியல்வாதி என்ற ரீதியில் விசாரணைக் குழுக்களிடம் கையளித்திருக்க வேண்டும்.

“இவர்கள் கூக்குரலிட்டாலும் செய்யாவிட்டாலும், ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். பாதிக்கப்பட்டவர்களின் மத நிறுவனங்களும் சமூகமும் அந்த நம்பிக்கையைக் கொண்டுள்ளன” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விசாரணை அறிக்கைகளை ஏன் இவ்வளவு காலம் மறைத்தார் என்றும் யாரைப் பாதுகாப்பதற்காகவும் கம்மன்பிலவ கேள்வி கேட்க வேண்டும் என்று லால்காந்த கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here