Saturday, July 4, 2026
No menu items!

K Dilakshan

வன்னியில் 387வாக்குப்பெட்டிகள் இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது..!

வன்னிமாவட்டத்தில் 387 வாக்குப்பெட்டிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் பி.எ. சரத்சந்திர தெரிவித்தார். தேர்தல் தொடர்பாக வவுனியா மாவட்டசெயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….. எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில்  வன்னிமாவட்டத்தில்  306081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 128585...

மன்னார் பெரிய பாலத்தடியில் விபத்து..!

மன்னார்  பெரிய பாலத்தடியில்   மோட்டார் சைக்கிள் பாதையை   விட்டு  விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று (20)காலையில் இடம்பெற்றுள்ளது . இந்த விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கி செலுத்தி வந்த நபர்   காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வித்து நடைபெற்ற இடத்தில் காணப்படும் உந்துருளியை போக்குவரத்து போலீசார் பார்வையிட்டு சென்றுள்ளனர்.

இன்றைய நாளுக்கான வானிலை….!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்திலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை...

மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தில் வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் சென்றனர்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகளை கொண்டு செல்லும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை (20) யாவும் பூர்த்தியடைந்துள்ளதுடன் வாக்களிப்பு நிலையங்களில் பொலிசார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர் நாளை நடைபெறவுள்ள 9 வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெறவுள்ளது இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலச்சத்து 44 ஆயிரம் வாக்களார்கள் வக்களிக்க தகுதி...

தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இலங்கை வருகை….!

சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சேர்ந்த 71 பிரதிநிதிகள் இலங்கை வருகை தந்துள்ளனர் அவர்களில் 43 பேர் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் , 22 பேர் பொதுநலவாய நாடுகளை சேர்ந்தவர்கள் கூடுதலாக, தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பிலிருந்து 6 பேரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வரும் நாட்களில், மேலும் 34 ஐரோப்பிய ஒன்றிய பார்வையாளர்கள் மற்றும் 3 கூடுதல் ஆசிய வலையமைப்பு பிரதிநிதிகள்...

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்…!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவிடக்கூடிய தொகை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 240 முறைப்பாடுகள்…!

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், கடந்த வியாழக்கிழமை வரையான காலப்பகுதியில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 240 முறைப்பாடுகள் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், அவற்றுடன் தொடர்புடைய 67 சந்தேக நபர்கள் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்து; ஒருவர் பலி…!

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்விட்டிகல மாவத்தை, கொஸ்வத்தை வீதிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாரஹென்பிட்டி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின்போது, மோட்டார் சைக்கிள் செலுத்துநர் லொறிக்கடியில் சிக்கி படுகாயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பிலியந்தலை...

ஜனாதிபதித் தேர்தலின் போது மோசடியான வாக்கு செலுத்துபவர்களுக்கு அபராதம்….!

ஜனாதிபதித் தேர்தலின் போது மோசடியான வாக்குகளை அல்லது அதற்கு ஆதரவளிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக குலரத்ன தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக குலரத்னவின் கூற்றுப்படி, தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு நபருக்கு 12 மாதங்களுக்கும் மேலான சிறைத்தண்டனை அல்லது 2 இலட்சம் ரூபா...

மஹியங்கனை, தம்பராவ பகுதியில் விபத்து; நால்வர் படுகாயம்…!

மஹியங்கனை, தம்பராவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹியங்கனை தம்பராவ விகாரைக்கு அருகாமையில் காரும் முச்சக்கரவண்டியும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில், நால்வர் படுகாயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுள் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img