Saturday, July 4, 2026
No menu items!

K Dilakshan

அம்பலாங்கொடை – எல்பிட்டிய வீதியில் விபத்து; ஒருவர் பலி…!

கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பலாங்கொடை - எல்பிட்டிய வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். எல்பிட்டியவிலிருந்து அம்பலாங்கொடை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது, எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவர் படுகாயமடைந்துள்ள...

எதிர்வரும் தேர்தல் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்பும் தேர்தல்; அனுர….!

எதிர்வரும் தேர்தல் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்பும் தேர்தல் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறை பிரதேசத்தில் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அனுரகுமார, " உரம் தேவைப்படும் போது ரணில் வீட்டில் இருந்தார். எனினும் நாங்கள் விவசாயத்திற்கு பலமான வேலைத்திட்டத்தை...

ஏமாற்று அரசியலுக்கு எதிராக உங்கள் மனதில் உள்ள வெறுப்பையும் கோபத்தையும் முடிவுக்கு கொண்டு வரலாம்; திலித்….!

தாம் முன்வைத்திருப்பது வாக்குறுதிப் பத்திரமல்ல, மாறாக களத்தில் யதார்த்தமாக்கக்கூடிய மூலோபாய வேலைத்திட்டத்தையே முன்வைத்திருப்பதாக சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “இது வாக்குறுதிப் பத்திரம் அல்ல, சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் இவ்வாறானதொரு மூலோபாய வேலைத்திட்டம் முன்வைக்கப்படுவது இதுவே...

நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு பெண்கள்…!

நாவுல, போவதென்ன நீர்த்தேக்கத்தில் வான்காதவு திறக்கப்பட்டதன் காரணமாக அம்பன் கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள வேளையில், மொரகொல்ல பிரதேசத்தில் நீராடச் சென்ற இரு பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், இது தொடர்பில் நாவுல பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, உடனடியாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், நீர்த்தேக்கத்தின் நீரை கட்டுப்படுத்தியுள்ளனர். பின்னர் தம்புள்ளை பொலிஸ் உயிர்காப்பு படையினர் வரவழைக்கப்பட்டு நீரில் மூழ்கிய...

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது…!

பதுளை பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை, உடுவர பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 831 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து, சந்தேக நபர்...

கொலை மற்றும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது…!

கொலை மற்றும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேலியகொடை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். பேலியகொடை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கிரிபத்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை...

அவசரகால திட்டம் தயாரிப்பதற்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானிகள் அனுமதி…!

ஜனாதிபதி தேர்தல் திகதி மற்றும் முடிவுகள் அறிவிக்கப்படும் போது நாட்டில் ஏற்படக்கூடிய எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்வதற்காக பொலிஸாரையும் ஆயுதப்படையினரையும் இணைத்து 'அவசரகால திட்டம்' ஒன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானிகளுக்கு அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவசர நிலை ஏற்படக்கூடும் என பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது பாதுகாப்பு பிரதானிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதை அடுத்து இந்த அனுமதி...

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி…!

பௌத்த சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய, 2025 ஆம் ஆண்டு அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை கொடுப்பனவை வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் சேவையை மதிப்பீடு செய்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் வருடாந்த ஆசிரியர் கொடுப்பனவாக 5000 ரூபா தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. இதன்படி, சீருடைக் கொடுப்பனவுடன், 2025 ஆம்...

தண்டனைச் சட்டம் திருத்தப்பட்டு, உரிய சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி…!

எந்தவொரு முறையிலும் உடல் ரீதியிலான தண்டனையை தடை செய்யும் வகையில், தண்டனைச் சட்டம் திருத்தப்பட்டு, அதற்கு உரிய சட்டத்தை உருவாக்குவதற்காக கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, வரைவு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது. சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அதனை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கும்...

சஜித்தை ஆதரித்து சுவரொட்டி ஒட்டிய இருவர் கைது…!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் இரவு வேளையில் சுவரொட்டிகளை   ஒட்டிக்கொண்டிருந்த இருவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதவான் பிணையில் விடுவித்துள்ளார். மட்டக்களப்பு தலைமையக பொலிஸார்  நள்ளிரவு வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மாமாங்கம்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img