Tuesday, June 30, 2026
No menu items!

K Dilakshan

நாமல் ராஜபக்ஷ -எம்.ஏ.சுமந்திரன் சந்திப்பு..!

வடக்கு கிழக்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மாவட்டங்களின் அபிவிருத்தி குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றாலும், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள குடிமக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை உறுதி செய்ய விரும்புவதாகவும், இந்த...

திருகோணமலை கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கும் இலட்சக்கணக்கான நண்டுகள்…!  

திருகோணமலை நகரில் உள்ள கடற்கரையில் இன்று சனிக்கிழமை (10.08) அதிகாலை முதல் இலட்சக்கணக்கான சிறு சிகப்பு நிறத்திலான நண்டுகள் இறந்த நிலையில் கரையொதுங்கி உள்ளன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இப்பிரதேசத்துக்கு கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகின்ற நிலையில் இவ்வாறான நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. சுமார் ஐந்து தொடக்கம் ஆறு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கடற்கரையில் மூன்று தொடக்கம்...

சாதித்து காட்டிய ஒலிம்பிக் வீராங்கனை..!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பாலின சர்ச்சைக்கு ஆளான அல்ஜீரிய நாட்டு குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப் தங்கம் வென்று சாதித்துள்ளார். இமானே கெலிஃப் ஆண் தன்மைக்குரிய ஹோர்மோன் அதிகம் இருப்பதாக ஏற்கனவே சர்ச்சை கிளம்பியது. இமானேவுக்கு ஆதரவாக ஒலிம்பிக் கமிட்டி துணை நின்றது. இந்நிலையில், தனது பாலினம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அனைவருக்கும் பதிலடிக் கொடுக்கும்...

ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு…!

ஜனாதிபதித் தேர்தலுக்காக நேற்றைய தினம்வரை 27 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த 14 பேரும் சுயேட்சை வேட்பாளர்கள் 13 பேரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்காகவும் மேலதிகமாக 200 மில்லியன் ரூபா நிதியை செலவிட நேரிட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க...

முச்சக்கர வண்டியொன்றிலிந்து நபரொருவரின் சடலம் மீட்பு..!

கொழும்பு பம்பலபிட்டியவில் முச்சக்கர வண்டியொன்றிலிந்து நபரொருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மசகு எண்ணெய்யின் விலை சற்று அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.84 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.66 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை உலக சந்தையில் இயற்கை...

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் பல நூறு கோடி மதிப்புள்ள தாலி திருட்டு..!  

பல நூறு வருட காலமாக சோழர் காலம் தொடக்கம் கோணேஸ்வர ஆலயத்தில்  இருந்து  வந்த தாலி போர்த்துக்கேயர் காலத்தில் கோயில் உடைக்கப்பட்ட போது சைவ சமயத்தினாரால்  பல உயிர் தியாகங்கள்  செய்யப்பட்டு  காப்பாற்றப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருந்த  நிலையில், கடந்த வாரம் இந்த தாலி பகலில்  திருடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொது மக்கள் குரலெழுப்ப தொடங்கினர்....

வாகன விபத்தில் மூவர் படுகாயம்..!

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரப்பாலம் பகுதியில் ஜீப் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒரே  குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டியிலிருந்து மட்டக்களப்பு பகுதிக்கு விடுமுறைக்காக வந்த  ஜீப் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. படுகாயமடைந்த  மூவரும் மகாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகனம் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் நீண்ட தூரத்திற்கு பாய்ந்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹங்வெல்ல கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது..!

கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் தேடப்பட்டு வந்த இரு சந்தேக நபர்களை ஹங்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஓகஸ்ட் 06 ஆம் திகதி ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின்...

12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்; தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை..!

களனி, வத்தளை, பியகம ஆகிய பகுதிகளுக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை (11.08) 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (11.08) காலை 9:00 முதல் இரவு 9:00 மணிவரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பேலிகொடை  நகர சபைக்குட்பட்ட பகுதிகள், ஜா எல, கட்டுநாயக்க, சீதுவை,...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஈரான்-அமெரிக்க பதற்றம்; தங்க விலை 1% வரை வீழ்ச்சி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய பதற்றம் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்து, பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இன்று...
- Advertisement -spot_img