Saturday, May 30, 2026
No menu items!

Priya

யாழில் உலங்கு வானூர்தி மூலம் வைத்தியசாலைக்கு நோயாளர்கள் அனுப்பி வைப்பு..!

நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 3 நோயாளர்கள் மேலதிக சிகிச்சையளிக்கும் வகையில் விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு நேற்றையதினம் (28.11.2024) அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நெடுந்தீவில் இருந்து 3 நோயாளர்களும் அவர்களது 3 உதவியாளர்களும் உலங்கு வானூர்தி மூலம் பலாலி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு தரைவழியாக கொண்டுசென்று யாழ்...

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது..!

கடந்த சில காலமாக பல்வேறு விதமான திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் புதன்கிழமை (27.11.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்ணகி நகர் பகுதியில் உறவினரின் வீட்டுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த பெண்ணிடம் கொட்டும் மழையில் வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த பெண் அணிந்திருந்த தாலியினை அறுத்து தப்பிச்செல்ல முற்பட்ட வேளை...

மட்டக்களப்பில் வீதியில் அடியோடு சரிந்து வீழ்ந்த பாரிய மரங்கள்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீசிய பலத்த காற்றினால் நகரிலுள்ள காந்திபூங்கா, மற்றும் கந்தையா சிறுவர் பூங்காவில் உள்ள மரங்கள் வியாழக்கிழமை (28.11.2024) பகல் 12 மணியளில் அடியோடு சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளது. இந்நிலையில், தீயணைப்பு படையினர் அவற்றை வெட்டி அகற்றியுள்ளனர். மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வடமாகாண பிரதம செயலாளர் விஜயம்..!

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வடமாகாண பிரதமர் செயலாளர் இளங்கோவன் அவர்களும் வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி சுதாகரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன், மாவட்ட நீர்ப்பாசன எந்திரி வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். கிளிநொச்சி மாவட்டத்தில்  வெள்ள அனர்த்தத்தின் காரணமாக 3812 குடும்பங்களைச் சேர்ந்த 11,728அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13...

வீட்டினுள் புகுந்த சிறுத்தை..!

முல்லைத்தீவு, விசுவமடு - இளங்கோபுரம் பகுதியில் சிறுத்தை ஒன்று வீடு ஒன்றிற்குள் புகுந்த சம்பவம் நேற்று (27.11.2024) பதிவாகியுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விசுவமடு, இளங்கோபுரம் கிராமத்தில் திடீரென சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் உள்நுழைந்துள்ளது. இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து திணைக்களத்தின் அதிகாரிகள் குறித்த சிறுத்தையை மீட்டு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில், தற்போது நிலவும் சீரற்ற...

மட்டக்களப்பில் 7,241 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைப்பு..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 11,890 குடும்பங்களைச் சேர்ந்த 37,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 56 இடைத்தங்கல் முகாம்களில் 2,558 குடும்பங்களைச் சேர்ந்த 7,241 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான சமைத்த உணவு வழங்கிவருவதுடன் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான படகு சேவை நடைபெற்றுவருவதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார். இந்த சீரற்ற கால...

கிளிநொச்சியில் வெள்ளத்தினால் நெற்பயிர்ச்செய்கை பாதிப்பு..!

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது வெள்ள அனர்த்தத்தின் காரணமாக 3812 குடும்பங்களைச் சேர்ந்த 11,728 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 320 குடும்பங்களைச் சேர்ந்த 910 அங்கத்தவர்கள் இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். தற்பொழுது வரை ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் காரணமாக பகுதி அளவில் 25 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும்...

சட்டவிரோத கட்டடங்களை அகற்ற ஆளுநர் பணிப்பு..!

வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமை தொடர்பில் ஆராயும், இணையவழி கலந்துரையாடல் இன்று காலை (28.11.2024)...

யாழில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் 12 முகாம்களில் தங்க வைப்பு..!

யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் 1,816 குடும்பங்களைச் சேர்ந்த 5,749 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 இடைத்தங்கல் முகாம்களில், 268 குடும்பங்களைச் சேர்ந்த 1006 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில், 59 குடும்பங்களைச் சேர்ந்த 186 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். யா/கொடிகாமம் போக்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இடைத்தங்கல் முகாமில், 47...

பல குளங்களில் 77 சதவீதத்தைக் கடந்த நீர்மட்டம்..!

நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அத்துடன் குளங்கள் மற்றும் நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் ஆறுகளை அண்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்படி தெதுறு ஓயா, நில்வளா கங்கை, களனி கங்கை, மகாவலி கங்கை, யான் ஓயா, மல்வத்து ஓயா, மகா ஓயா, அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்...

About Me

7769 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் முதல் முறையாக 'சிக்மா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை லைக்கா மற்றும் ஜே.எஸ்.ஜே மீடியா...
- Advertisement -spot_img