Friday, May 1, 2026
No menu items!

Tamil Vani

தொடருந்து மோதி காட்டு யானையொன்று பலி!!

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற தொடருந்து மோதி இன்று அதிகாலை காட்டு யானையொன்று உயிரிழந்துள்ளது. கல்லெல்ல பகுதியில் அதிகாலை 5:30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டள்ளது. அப்பகுதி மக்களின் கூற்றுப்படி, அதிகாலை 3 மணி முதல் யானை கிராமத்தில் சுற்றித் திரிந்து வருவதாகவும் அப்பகுதியில் உள்ள நெல் வயல்களுக்குள் நுழைந்து வருவதாகவும் அறியப்படுகிறது. யானை வந்தபோது வனஜீவராசிகள்...

அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப்க்கு நரம்பு நோய்..!

அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் காலில் ஏற்பட்ட வீக்கத்தை பரிசோதித்ததில் அவருக்கு ‘Chronic Venous Insufficiency’ எனப்படும் நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய், உலகளவில் 20ல் ஒருவரை பாதிக்கும் எனவும், கால்களில் இருந்து இதயத்திற்கு இரத்தம் சரியாக திரும்பாததால் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். Chronic Venous Insufficiency என்பது நரம்புகளில் இரத்தம் தேங்கி, நரம்பு சுவர்களில் அழுத்தம் மற்றும்...

மெழுகு அருங்காட்சியகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி!

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (17) காலை ஜனாதிபதி  அனுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டுள்ளார். நகர அபிவிருத்தி அதிகாரசபையால் புதுப்பிக்கப்பட்ட எஹெலேபொல வளவு தலதா மாளிகைக்கு கையளிக்கப்பட்டதோடு தொல்பொருள் மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாப்பதற்காக இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது.  

யாஷ் தயாளை கைதுசெய்ய தடை..!!

பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளை கைதுசெய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் யாஷ் தயாள் மீது திருமண மோசடி குற்றச்சாட்டை அளித்திருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக கிரிக்கெட் வீரருடன் உறவில் இருந்ததாகவும் உடலரீதியாகவும் சுரண்டப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கு மீதான...

பொலன்னறுவையில் புதிதாக தபாலகம் திறந்து வைப்பு..!!

இலங்கை அஞ்சல் சேவை நாட்டின் வரலாற்றையும் எதிர்காலத்தையும் இணைக்கும் முக்கிய ஊடகமாக மாற்றப்படும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்நோக்கின் ஒரு பகுதியாக, பொலன்னறுவை புதிய பிரதான அஞ்சல் அலுவலகம் இன்று (17) அமைச்சர் தலைமையில் பொதுமக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டது. இதன் போது, முத்திரை கௌண்டர் திறப்பு மற்றும்...

இலங்கை மின்சார (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் மேற்பார்வைக்குழு இன்று (17) மீண்டும் கூடவுள்ளது..!!

இலங்கை மின்சார (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு இன்று (17) மீண்டும் கூடவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த குழு கடந்த 15ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதன் முறையாக கூடியது. இக்கூட்டத்தில் வலுசக்தி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட நிறுவங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்...

114 வயதான மரதன் ஓட்டப்பந்தய வீரர் மரணம்..!!

உலகின் வயதான மரதன் ஓட்டப்பந்தய வீரர் என்று நம்பப்படும் பிரித்தானிய-இந்தியரான ஃபௌஜா சிங், 114ஆவது வயதில் விபத்து ஒன்றில் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பஞ்சாபில் சிற்றூந்து ஒன்றில் மோதுண்டு அவர் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், 100 வயதுக்கு மேற்பட்டவர் உட்பட பல வயது பிரிவுகளில் மரதன் ஓட்டங்களில் பங்கேற்று சாதனை படைத்தார். அவர் 89 வயதில் ஓடத் தொடங்கி,...

அமெரிக்க விசா தொடர்பில் வெளியான புதிய தகவல்..!!

அனைத்து வகை அமெரிக்க விசா வைத்திருப்பவர்களுக்கும், விசா விண்ணப்பதாரர்களுக்கும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. மதுபோதையில் வாகனம் செலுத்துவது அமெரிக்க சட்டத்தின் கீழ் ஒரு கடுமையான குற்றமாகும். அது விசா தொடர்பில் சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுகிறது எனவும் தமது அதிகாரப்பூர்வ X தளத்தில் பகிரப்பட்ட செய்தியில் அந்த தூதரகம்...

வவுனியாவில் சாலையோரக் கடைகள் அகற்றம்..!!

வவுனியா மாவட்டத்தின் நகர சபை செயலாளரின் உத்தரவின்படி வைத்தியசாலை மற்றும் இலுப்பையடி பகுதிகளில்  விதிகளை மீறி அமைத்திருந்த சட்டவிரோத சாலையோர கடைகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து, இன்றையதினம்(16) வவுனியா கொரவபொத்தானை பள்ளிவாசலின் சுற்றுவட்ட பகுதியில் அமைந்திருந்த சாலையோரக்கடைகளும் நீக்கப்பட்டுள்ளன. இதற்கான மாற்று இடங்கள் வவுனியா பிரதேச சபையால் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

குளவி கொட்டுக்கு இலக்காகி 8 பேர் வைத்தியசாலையில்..!!

அக்கரப்பத்தனை - ஊட்டுவள்ளி தோட்டத்தில், குளவி கொட்டுக்கு இலக்கான 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை மலையில் பணி செய்துகொண்டிருந்த நிலையிலேயே, இவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆண் தொழிலாளர்கள் என, எமது செய்தியாளர் தெரிவித்தார்.

About Me

526 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img