Sunday, July 5, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு;மழை வீழ்ச்சி தொடர்பிலும் எச்சரிக்கை

இலங்கைக்கு வடகிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போதும் நிலை கொண்ருப்பதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழையோ அல்லது பலத்த மழையோ காணப்படலாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடமேல், மேல், சபரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களிலும், வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த...

போதைப்பொருள் கடத்தல்; 23 பிக்குகள் மீண்டும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து குஷ் மற்றும் ஹாஷ் போதைப்பொருட்களைக் கடத்தியமை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 23 பிக்குகளை, எதிர்வரும் மே 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் சுபானி அபேசேகர இன்று உத்தரவிட்டார். தாய்லாந்திலிருந்து ஏப்ரல் 25 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேகநபர்களின் பயணப் பைகளில் 112 கிலோகிராம் குஷ்...

ஜனாதிபதி அநுரவுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் விஜய்

முதலமைச்சராகப் பதவியேற்ற சி.ஜோசப் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்த நிலையில் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். X தள பதிவின் ஊடாக, இலங்கை ஜனாதிபதி தெரிவித்த வாழ்த்துகளால் தாம் "மிகுந்த பெருமை" அடைவதாகவும், இந்த "கனிவான செயலுக்காக" அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் விஜய் கூறியுள்ளார். ஜனாதிபதி திசாநாயக்க, தனது...

கபில சந்திரசேனவுக்காக முன்னிலையான போலி பிணைதாரர்கள் தொடர்பில் ஒருவர் கைது

மறைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேனவுக்கு, பணம் பெறும் நோக்கில் சரீரப்பிணைக்கு நின்ற இரு நபர்களை இணைப்பதில் இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கெசல்வத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஏர்பஸ் விமான ஒப்பந்தம்...

112 பில்லியன் முழுமையான அரசாங்க நிதியில் நெடுச்சாலைகள் பணிகள்

ரம்புக்கன–கலகெதர பகுதியை உள்ளடக்கிய மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் அடுத்த கட்ட கட்டுமானத்துக்கு 112 பில்லியன் ரூபாய் முழுமையாக அரசாங்க நிதியுதவியுடன் மேற்கொள்ள அமைச்சரவைஅனுமதி அளித்துள்ளது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இத்திட்டம், புதிய கடன்களைப் பெறாமல் இலங்கை அரசாங்கத்தால் முழுமையாக நிதியளிக்கப்பட்டு மேற்கொள்ளப்படப்படுகிறது. இது நாட்டின் பொருளாதார மீட்சியில் ஒரு...

ஏர்பஸ் விவகாரம்; விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) முன் இன்று (12) ஆஜரானார். 2013-ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் ஏர்பஸ் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டபோது, ​​2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் ஆணைக்குழுவின் முன் ஆஜராகியுள்ளார். இன்று ஆஜராகுமாறு...

ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகும் மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை (12) இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக உள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் ஜனாதிபதி காலை 9.00 மணிக்கு முன்னிலையாவார் என கூறினார். மேலும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பாணை தொடர்பான சட்ட விடயங்கள் குறித்து விவாதிக்க,...

கொழும்பு டேம் வீதி கட்டிடத்தில் தீ விபத்து

கொழும்பு,டேம் வீதியில் (கேஸ்பா) உள்ள கட்டிடமொன்றில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக, 10 தீயணைப்பு வாகனங்கள் ஏற்கனவே சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. சேதத்தின் அளவு அல்லது தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்தேவி பயணம்; இணையத்தில் இருக்கைகளை பதிவு செய்யும் புதிய வசதி

பல மாதங்களுக்கு பின்னர் இன்று (11) மீண்டும் இயக்கப்பட்ட, கோட்டைக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான யாழ்தேவி இரயில் சேவையில் பயணிப்பதற்கான இருக்கைகளை இப்போது இணையம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவை வரையறுக்கப்பட்ட கால அட்டவணையின் கீழ் செயல்படுத்தப்படும் என இலங்கை இரயில்வே திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கான இரயில் சேவை திங்கள், புதன்...

ஐந்து மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை!

நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலையைத் தொடர்ந்து,தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஐந்து மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கைகள் இன்று (11) இரவு 9.00 மணி வரை அமுலில் இருக்கும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, பதுளை மாவட்டத்தில் உள்ள பசறை, குருநாகல் மாவட்டத்தில் உள்ள ரிதிகம, மாத்தளை மாவட்டத்தில் உள்ள...
- Advertisement -

Latest News

டெங்கு நோய் அதிகரிக்க முறையற்ற கட்டுமான பணிகளே காரணம்!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், திட்டமிடப்படாத கட்டுமான பணிகளால் உருவாகும் நுளம்பு இனப்பெருக்க பகுதிகளே இதற்கு முக்கிய காரணம் எனவும்...