Wednesday, July 1, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அரசாங்கம் விளக்கம்

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைந்தாலும், இலங்கையில் எரிபொருள் விலையை குறைப்பது ஒகஸ்ட் அல்லது செப்டம்பருக்கு பின்னரே சாத்தியம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் இதனை கூறியுள்ளனர். 'இலங்கை எரிபொருளை மாதாந்த டெண்டர் மூலம் முன்கூட்டியே கொள்வனவு செய்கிறது....

2026 உயர்தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சு அறிக்கை!

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை திட்டமிட்டபடி ஒகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சையை மேலும் ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அமைச்சு இந்த முடிவை அறிவித்துள்ளது. 'தேசிய கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் வழிகாட்டிக்கு அமைய, உயர்தர...

தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கு புதிய வரி: ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை

தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ள வரி, இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி தொழிலை பாதித்து அந்நிய செலாவணி வருமானத்தை குறைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் 'X' தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தேங்காய் ஏற்றுமதித்துறை அந்நிய செலாவணி ஈட்டுவதில் பெரும் பங்கு கொண்டது என்றும்,...

சாதாரண தர பரீட்சையில் 11,790 பேர் 9A சித்தி!;225,748 மாணவர்கள் உயர்தரத்துக்கு தகுதி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையில் (Ordinary Level) 225,748 மாணவர்கள் உயர் தரத்துக்கு செல்ல (Advanced Level) தகுதி பெற்றுள்ளனர் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜெனரல் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு குறித்து அறிவிப்பதற்காக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர்...

375 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளை கடத்திய நபர் கைது!

பெருமளவு ஹஷிஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 24 வயதான டொமினிகன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையின் போது, ​​இலங்கை சுங்க அதிகாரிகள் சந்தேக நபரிடமிருந்து 37 கிலோகிராம் மற்றும் 675 கிராம் ஹஷிஷ் போதைப்பொருளைப் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட...

ஸ்ரீலங்கா முஸ்லீம் கொங்கிரஸ்-தமிழக பிரதிநிதிகள் சந்திப்பு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் கொங்கிரஸ் (SLMC) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூஃப் ஹக்கீம், நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் உள்ள தமிழ்நாடு செயலகத்தில், தமிழகத்தின் பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, ​​இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் சிறுபான்மை சமூகங்கள் தொடர்பான விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்...

ஐசிசி தலைவர் ஜெய் ஷா கொழும்பு வருகை!

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நிர்வாக கட்டமைப்பு குறித்து அரச அதிகாரிகள் மற்றும் கிரிக்கெட் பங்குதாரர்களுடன் கலந்துரையாடுவதற்காக சர்வதேச கிரிக்கெட் சபையின் ICC தலைவர் ஜெய் ஷா இலங்கைக்கு வருகை தந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின், அகமதாபாத்தில் இருந்து இலங்கைக்கான இணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இன்று ஆரம்பிக்கப்பட்ட FitsAir விமான சேவையின் முதல் நேரடி விமானத்தில் ஜெய்...

 7.5 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து 7.5 கோடி ரூபாய் பெறுமதியான "குஷ்" போதைப்பொருள் தொகையை கடத்தி வந்த நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க திணைக்கள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரும் விமான நிலைய சுங்க அதிகாரிகளும் இணைந்து இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த...

அமெரிக்கா – ஈரான் உடனடி போர் நிறுத்தம்: இலங்கை வரவேற்பு

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்ட உடனடி போர் நிறுத்த உடன்பாட்டை இலங்கை வரவேற்றுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய பதற்றத்தை தணித்தல் மற்றும் நீண்டகால பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு இது முக்கிய படியாக அமையும் என இலங்கை பாராட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி உடனடி போர் நிறுத்தம்,...

கொட்டகலை திருமண விழாவில் மோதல்: 11 பேருக்கு விளக்கமறியல்

கொட்டகலை நகரத்தில் கடந்த புதன்கிழமை (17) நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தலவாக்கலை மற்றும் நோர்டன் பகுதிகளைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து 11 சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று கைது செய்தனர். திம்புள்ளை,பத்தனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் சுற்றியுள்ள நிலையங்களின் பணியாளர்கள் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை...
- Advertisement -

Latest News

வில்பத்து தேசிய பூங்காவில் கரை ஒதுங்கிய டொல்பின்

வில்பத்து தேசிய பூங்காவின் கொல்லன்கனட்ட பகுதியில் நேற்று மாலை (30) உயிரிழந்த நிலையில் டொல்பின் ஒன்று கரை ஒதுங்கியதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். வில்பத்து தேசிய...