Wednesday, July 1, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

லங்கா சோல்ட் நிறுவன பொது முகாமையாளர் கைது!

முறைகேடான உப்பு பொதியிடல் கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் லங்கா சோல்ட் நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளர் ரத்னாயக்க முதியான்செலாகே குணரத்னவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று கைது செய்தது. முறையான கொள்முதல் நடைமுறையின்றி மேற்கொள்ளப்பட்ட மீள் கட்டளையால் அரசுக்கு சுமார் ரூ. 14.3 மில்லியன் நட்டம் ஏற்பட்டதாகவும், கொள்வனவு செய்த நிறுவனத்துக்கும் நியாயமற்ற...

விமானப்படை- பொலிஸ் மோதல்: விசேட விசாரணைக்கு உத்தரவு

கல்பிட்டிய துப்பாக்கி சுடும் பயிற்சிக்கான மைதானத்தில் கடந்த ஜூன் 17ம் திகதி குண்டு அகற்றும் பயிற்சியின்போது ஏற்பட்ட பதற்றமான சம்பவம் தொடர்பில் இலங்கை விமானப்படை விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது. விமானப்படை தளபதி, சம்பவத்தை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க விசேட குழு ஒன்றை நியமித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து தெரிவிக்கப்படுவதாவது, பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த துப்பாக்கி சுடும்...

நாட்டுக்கு அதிக அந்நிய செலாவணி அனுப்பும் நாடாக மாறியுள்ள குவைத்

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களிடமிருந்து வரும் அதிகபட்ச அந்நிய செலாவணியை அனுப்பும் நாடுகளில் குவைத் முதலிடத்தை பிடித்துள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. 2025ல் குவைத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பிய தொகை 893 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். வருடத்துக்கு சுமார் 80,000...

எரிபொருள் விலையை குறைக்குமாறு சம்பிக்க கோரிக்கை!

எரிபொருள் விலையை குறைக்க முடியாத சூழல் இருப்பதாக  அரசு கூறுவதை முன்னாள் எம்.பி. பாட்டலி சம்பிக்க ரணவக்க நிராகரித்துள்ளதுடன் பழைய விலைக்கு கொள்வனவு செய்த எரிபொருள் இருப்பு காணப்பட்ட போதும் விலை அதிகரிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் விலை அதிகரிப்பில் முரண் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெப்ரவரியில், குறைந்த விலைக்கு பெற்ற எரிபொருள் இருப்பு காணப்பட்ட...

 கோட்டாபயவின் மனு மீதான விசாரணை ஜூன் 24க்கு ஒத்திவைப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்படுவதை தடுக்க கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு மீதான மேலதிக விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது. குறித்த மனு மீதான விசாரணை நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய, நீதியரசர் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய...

என் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்;லால்காந்த

சொத்துக்கள் தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார். இதேநேரம் தமது சொத்துக்கள் குறித்து சந்தேகம் உள்ளவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். கடுவலை, மஹரகமை ஆகிய பகுதிகளில் கோடிகணக்கக்கான பெறுமதியுள்ள 2 சொகுசு வீடுகள் தனக்கு உள்ளதாக எதிர்கட்சி எம்.பி. சாமர சம்பத் தசநாயக்க கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்...

கோட்டாபயவின் செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சுகீஸ்வர பண்டார குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அரச நிறுவனங்களில் இருந்து ஒரே சமயத்தில்  இரண்டு ஊதியங்களை பெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

களனி பாலத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

கொழும்பு செடவத்தை பகுதியில் உள்ள களனி பாலத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (17) காலை கிராண்ட்பாஸ் பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சடலம் மீட்கப்பட்டது. உயிரிழந்த நபருக்கு 35 முதல் 40 வரை என நம்பப்படுகிறது. உயிரிழந்தவர் சுமார் 5 அடி 5 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும்...

பாடசாலைகளில் அங்கீகாரமற்ற நிறுவனங்களின் திட்டங்களை  அனுமதிக்க முடியாது – பிரதமர் 

அரச அங்கீகாரமற்ற நிறுவனங்கள் மற்றும் குழுக்களால் முன்மொழியப்படும் எந்தவொரு திட்டமும் எந்த சூழ்நிலையிலும் பாடசாலைகளுக்குள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது என பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் டொக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். வட மத்திய மாகாண கல்வி அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். இக்கலந்துரையாடல் அனுராதபுரத்தில் உள்ள மாகாண சபை வளாகத்தில் இடம்பெற்றது. இதன்...

யோசித ராஜபக்ஷ கைது: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விளக்கம்

முன்னாள் இலங்கை கடற்படை அதிகாரி யோசித கனிஷ்க ராஜபக்ஷவின் கைது தொடர்பான காரணங்களை இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) விளக்கியுள்ளது. இன்று (17) வெளியிடப்பட்ட ஊடக  அறிக்கையில் ஆணைக்குழு  அவற்றை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில்,கடற்படை கேடட்டாக இருந்த ராஜபக்ஷ, 2006 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையின் நிர்வாக பிரிவில் அதிகாரியாக நியமிக்கப்பட்டபோது, நிர்ணயிக்கப்பட்ட...
- Advertisement -

Latest News

பாகிஸ்தானில் பயிற்சி வகுப்பு கூரை இடிந்து விபத்து: 14 மாணவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள லாகூர் நகரில் ஒரு தனியார் பயிற்சி வகுப்பின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள்...