Thursday, July 16, 2026
No menu items!

News

டிரான் அலஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததை நிராகரித்தது ஆசிய இணைய கூட்டமைப்பு  

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நாடாளுமன்றத்தில் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்த விவாதத்தில் வெளியிட்ட கருத்துக்களை நிராகரித்துள்ளது. ஆசிய இணைய கூட்டமைப்பு நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் அதன் தற்போதைய வடிவத்தில் முன்னெடுக்க முடியாது என்றும்  , இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் சாத்தியாமான  வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீட்டினை பாதிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. உலகின் மிகவும் வலுவான...

நமீபியா அணியை வீழ்த்தியது அவுஸ்திரேலியா

நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் 2 போட்டிகள நடைபெற்றிருந்தன. இதில் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் நமீபியா அணியை வீழ்த்தியிருந்தது. மற்றைய போட்டியில் அயர்லாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் பங்களாதேஷ் அணி 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி...

அமெரிக்காவில் 8 பேர் பலி..!

அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் ஜுலியட் பகுதியில் உள்ள  இரண்டு வீடுகளில் இன்று துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள்  இடம்பெற்றுள்ளதுடன் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பம் குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் ரோமியோ நான்சி என்ற நபரே துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டு...

அமெரிக்க பனிப் புயலில் 90 இற்கு மேற்பட்டோர் பலி

அமெரிக்காவில் கடந்த வாரம் முழுதும் வீசிய பனிப் புயலில் 90க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். டென்னசீ, ஒரேகன் உள்ளிட்ட மாநிலங்களிலே இவ்  மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் கடுமையான பனிப்புயல் காரணமாக குறித்த மாநிலங்களில் நெருக்கடிநிலை இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி தவித்து வருவதுடன் இந்த வாரமும் பனிப்புயல் வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும்  டென்னசீயில் குழாய்கள் உடைந்துள்ளமையால் சுமார்...

யாழ். நெடுந்தீவில் மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 06 தமிழக  மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த கடற்படையினர் , இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து கடற்தொழில் ஈடுபட்டு இருந்த தமிழக  மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களின் இரண்டு படகுகளையும் மீட்டு இருந்தனர். மேலும் கைது செய்யப்பட்ட...

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு ஜனாதிபதி வாழ்த்து

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அணிசேரா மாநாட்டுக்காக உகண்டா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக  நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கட்சியின் பொதுச்சபை...

க.பொ.த சாதாரண தர  பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு

க.பொ.த சாதாரண தர  பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் (23) பெப்ரவரி 15ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், விண்ணப்பங்களை நிகழ்நிலையில் மாத்திரமே விண்ணப்பிக்க  முடியும் என பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும், சகல பாடசாலை விண்ணப்பதாரிகளும் பாடசாலை அதிபர் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட முறையிலும் உரிய அறிவுறுத்தல்களுக்கமைய நிகழ்நிலையில்...

உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்திற்கு எதிர்ப்புத்  தெரிவித்து சமூக ஆர்வலர்களால் இன்றைய தினம் பாராளும்ன்ற பகுதியில்  ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை 2 ஆம் வாசிப்பு மீதான விவாதத்துக்கு சபையில் எடுத்துக்கொள்ள வேண்டாமென எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது மக்களின் பேச்சு சுதந்திரத்தை ஒடுக்குவதாக தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்  உத்தேச...

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக மனுத்தாக்கல்

அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக  நேற்றையதினம் (22) நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த ரஞ்சித் மத்துமபண்டார, “உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் எதிர்கட்சிகளுக்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்தினை விளைவிக்ககூடியது. மேலும் இந்த சட்டமூலம் நாட்டில் பயங்கரவாதம் நிலவாத ஒரு...

இரு பேருந்துகள் மோதி கோரவிபத்து..!

ஊர்காவற்துறை - குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த  இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் தனியார் பேருந்தும் அல்லைப்பிட்டியில்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த விபத்து இன்று (23.1.2024) காலை 6.30 மணியளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் விபத்தில் பலரும் காயமடைந்துள்ள நிலையில்  8 பயணிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்டதகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -

Latest News

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை அச்சுறுத்தல் மிக்கதாக பெயரிட்டது பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. பிரித்தானியாவின் "அரச அச்சுறுத்தல்...