Friday, July 10, 2026
No menu items!

Updates

களனி ஆற்றில் நீர்மட்டம் உயர்வு; 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

களனி ஆற்றின் நீரேந்து பகுதிகளில் சுமார் 300 மி.மீ. குறிப்பிடத்தக்க மழை வீழ்ச்சி பதிவானதைத் தொடர்ந்து, அடுத்த 48 மணி நேரத்திற்கு களனி ஆற்றை சூழவுள்ள தாழ்வான பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது. களனி ஆற்றில் உயர்ந்து வரும் நீர்மட்டமானது, ஹங்வெல்ல, சீத்தாவக்க, டொம்பே, பாதுக்க, ஹோமாகம, பியகம,...

கிரிக்கட் சபையின் நிதிப்பிரச்சினைகள் பாரதூரமானவை;எரான் விக்ரமரத்ன

இலங்கை கிரிக்கெட் சபையின் நிதிப் பிரச்சினைகள் எதிர்பார்த்ததை விட மோசமாக இருப்பதாக இலங்கை கிரிக்கெட்டின் சீர்திருத்தக் குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். பதவியேற்ற பின்னர் தனது முதல் ஊடக சந்திப்பில் பேசிய விக்ரமரத்ன, இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) நிதிகளை ஆய்வு செய்ய தமது குழு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கட் சபையின்...

ட்ரம்பின் போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த தீர்மானித்துள்ள செனட் சபை

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்குவதைத் தடுக்கும் வகையில் போர் அதிகாரத் தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்லும் பிரேரணையில், அமெரிக்க செனட் சபை நேற்று 50-47 என்ற வித்தியாசத்தில் இன்று (20) வாக்களித்ததுள்ளது. குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 50 பேர் வாக்களித்ததோடு எதிராக (ட்ரம்புக்கு ஆதரவாக 47) 47 பேர்...

இலங்கை அனைத்து சமூகங்களுக்கும் சொந்தமானது!; ஜனாதிபதி அநுர

போரில் அன்புக்குரியவர்களை இழந்த வலியை பல குடும்பங்கள் இன்னும் சுமக்கின்றன என்றும் இதுபோன்ற துன்பங்கள் மீண்டும் ஒருபோதும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற போர் வீரர்கள் நினைவு விழாவில் உரையாற்றிய போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனை குறிப்பிட்டார். இராணுவத்தினர் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதை மாத்திரம் விரும்பவில்லை என்றும்,...

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க திட்டம்

அண்மையில் பெய்த கனமழையால் விவசாயிகளின் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட்டு அதற்கேற்ப ஒரு ஹெக்டேயருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என கமத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. நெல்,சோளம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றை பயிர் செய்தவர்களுக்கு இந்த இழப்பீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கமைய, பயிர் சேதமடைந்த விபரங்களை...

இரயில் விபத்துக்கு காரணமான நபர்; விசாரணைகள் தீவிரம்

களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று காலை (16) சம்பவித்த ரயில் விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் இல்லத்திலிருந்து பல கருவிகள் மற்றும் ரயில்வே உபகரணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். ரயில் தண்டவாளங்களை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் மூன்று இரும்பு நெம்புகோல்களும், அவற்றை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கருவிகளும் சந்தேக நபரின் வீட்டில்...

அரசாங்கத்தை உலுக்கியுள்ள மற்றுமொரு பண பரிமாற்றம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவை வழங்குநருக்கு 74,000 ஐக்கிய அரபு அமீரக திர்ஹம் செலுத்துவதில் மற்றொரு பணப்பரிமாற்றத் தவறு நிகழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக்க இன்று டெய்லி மிரர் ஊடகத்திடம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தத் தவறான பணப்பரிமாற்றம் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்றதாகவும், இதுகுறித்த விசாரணைகள் தற்போது...

தமிழக அரச அலுவலகங்களில் முதல்வர் விஜய்யின் படம் கட்டாயம்!

அரசு அலுவலகங்கள், அரசுத்துறை சார்ந்த கட்டிடங்கள் சகலவற்றிலும் முதல்வர் விஜய்யின் ஒளிப்படத்தை (புகைப்படம்)வைப்பது கட்டாயம் என தமிழ்நாட்டு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முதல்வர் விஜய்யின் அங்கீகரிக்கப்பட்ட ஒளிப்படம் சகல அரசு அலுவலகங்கள், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், தமிழ்நாடு அரசின் தன்னாட்சி...

சீரற்ற காலநிலை; காய்கறிகளின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காய்கறி விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால், எதிர்வரும் நாட்களில் காய்கறி விலைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், தற்போது நிலவும் மழை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று எச்சரித்துள்ளது. மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், புத்தளம், காலி மற்றும் மாத்தறை...

கபில சந்திரசேன உயிரிழப்பு; சிசிடிவி, ஏனைய ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்ததாக கூறப்படும் இல்லத்தில் உள்ள சிசிடிவி கெமராக்கள் இயங்கிய பொழுதும் அவை நீண்ட காலமாக காட்சிகளைப் பதிவு செய்யவில்லை என குற்றப்புலானய்வு பிரிவு, நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அவர் உயிரிழந்த இல்லத்தில் இருந்து காணொளி எதுவும் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் அப்பகுதிக்குள்...
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...