Sunday, July 26, 2026
No menu items!

அமெரிக்க ஜனாதிபதி

அமைதிக்கான 2025 நோபல் பரிசு: டொனால் ட்ரம்ப்க்கு கிடைக்குமா?

2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டுக்காக 338 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காசா-இஸ்ரேல் உள்ளிட்ட 7 போர்களை நிறுத்தியதாக கூறி, தனக்கு அமைதிக்கான நோபல் வழங்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். பாகிஸ்தான், இஸ்ரேல், கம்போடியா உள்ளிட்ட நாடுகள் இவரை பரிந்துரைத்துள்ளன. ஆனால்,...

ட்ரம்ப் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மத்திய கிழக்குக்கு நோக்கி பயணம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சபாநாயகர் அமீர் ஓஹானாவின் அழைப்பின்பேரில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மத்திய கிழக்கு நாடுகள் பயணிக்கிறார். அவர் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். இந்த உரை 2008க்குப் பின்னர் ஒரு அமெரிக்க ஜனாதிபதி ஆற்றும் முதல் உரையாகும்.

இஸ்ரேல்–ஹமாஸ் இடையிலான காசா சமாதானத் திட்டத்தின் முதற்கட்டத்தில் ஒப்பந்தம் — டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான காசா சமாதானத் திட்டத்தின் முதற்கட்டம் தொடர்பாக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவர் இதனை "உலகத்திற்கே ஒரு சிறந்த நாள்" என்று வர்ணித்ததுடன், காசா பகுதிக்கு நேரில் சென்று நிலைமையைப் பார்வையிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். “நான் அதைப் பரிசீலிக்கிறேன்,” என ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியுள்ளார். மேலும்,...

இஸ்ரேல்-காசா போர் விரைவில் முடிவடையலாம் – டொனால்ட் ட்ரம்ப்!

இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். போர்நிறுத்தத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்ட 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றை ட்ரம்ப் வெளியிட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் டொனால்ட் ட்ரம்பும்...

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த டொனல்ட் ட்ரம்ப்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தமை குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ட்ரூத் சோசியலில் (truth social ) பதிவொன்றை வெளியிட்டுள்ளார். தனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்ததாகவும், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததாகவும், இந்திய பிரதமராக மோடி சிறப்பாக...

பிரித்தானியாவில் மன்னர் சார்ள்ஸை சந்திக்க உள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அரசு முறைப் பயணமாக பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் இன்று மன்னர் சார்ள்ஸை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, அவரது இரண்டாவது பதவிக்காலத்தில் பிரித்தானியாவிற்கு மேற்கொள்ளப்படும் இரண்டாவது விஜயமாகும். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பும் அவர் அங்கு விஜயம் செய்திருந்தார். ட்ரம்ப் இரண்டு நாட்கள் பிரித்தானியாவில் தங்குவார் என்றும், அந்த காலத்தில் 50...

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நண்பரான சார்லி கிர்க் துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான தகவல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நண்பரான சார்லி கிர்க்கைக் கொல்லப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியைச் சுற்றி சுற்றப்பட்டிருந்த துண்டில் இருந்த மரபணு, காவலில் உள்ள சந்தேக நபருடன் பொருந்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் இதனை உறுதி செய்துள்ளார். இந்தநிலையில், குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்ட டைலர் ரொபின்சனுக்கு எதிராக இந்த வாரத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் என்று...

ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் இந்த வாரம் ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். மன்னர் மூன்றாம் சார்லஸுடன் விமானம் மற்றும் வண்டிப் பயணம் முதல் வரலாற்று சிறப்புமிக்க வின்ட்சர் கோட்டையில் ஒரு பிரமாண்டமான அரசு விருந்து வரையான நிகழ்வுகளில் அவர் இதன்போது பங்கெடுக்கவுள்ளார். வர்த்தகம், வரிகள் மற்றும் உக்ரேன் போர் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளுக்காக...

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக்கொலை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க், பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். 31 வயதான சார்லி கிர்க், காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு...

அமெரிக்கா–ஜப்பான் வர்த்தக ஒப்பந்தம்: 15% வரி மற்றும் 550 பில்லியன் டொலர் முதலீடு!

அமெரிக்கா – ஜப்பான் இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன்படி, அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து ஜப்பான் பொருட்களுக்கும் 15 சதவீத வரி விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஓட்டோமொபைல், உதிரிபாகங்கள், விண்வெளி தயாரிப்புகள், மருந்துகள் மற்றும் உள்நாட்டில் கிடைக்காத இயற்கை வளங்களுக்கு...
- Advertisement -spot_img

Latest News

நாமலின் திருமண நிகழ்வு; 2.68 மில்லியன் மின் கட்டண வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 2.68 மில்லியன் ரூபாய்  செலுத்தப்படாமை தொடர்பான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை...
- Advertisement -spot_img