பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவின் புது தில்லியை சென்று, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உடனான முதல் உயர்மட்ட சந்திப்பை தொடங்கினார்.
ஜெய்சங்கர் தெரிவித்ததாவது, இச்சந்திப்பில் இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய அக்டோபர் 18 வரை இந்தியாவில் தங்கியிருப்பார். அப்போது அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல உயர்மட்ட சந்திப்புகளில் கலந்து கொள்வார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அக்டோபர் 17 ஆம் திகதி நடைபெறவிருக்கும் NDTV உலக உச்சி மாநாட்டில், “நிச்சயமற்ற காலங்களில் வழிகாட்டுதல் மாற்றம்” என்ற தலைப்பில் பிரதமர் சிறப்புரையாற்ற உள்ளார்.







