Friday, July 24, 2026
No menu items!

இராணுவம்

சுற்றுலா வலயங்களில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்…!

சுற்றுலா வலயங்கள் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு பணியில் பொலிஸாருக்கு மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அறுகம்பே, ஹிக்கடுவ, வெலிகம, மிரிஸ்ஸ, திக்வெல்ல போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அறுகம்பேயில் உள்ள சுற்றுலாத் தலங்கள்...

தீய சக்தி அழிந்துவிட்டது ; இஸ்ரேல் பிரதமர்!

ஹமாசின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் உயிரிழந்தது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது இஸ்ரேல் இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார். ஹனியே கொல்லப்பட்டதையடுத்து ஹமாசின் புதிய தலைவராக பொறுப்பேற்ற யாஹ்யா சின்வார் காஸா இராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டார்...

இராணுவத்தினரால் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு நிரந்தர வீடு கையளிப்பு…

யாழ். பாதுகாப்பு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க அவர்களின் எண்ணக் கருவுக்கு அமைவாக 55 வது காலால் படை பிரிவின் வழிகாட்டலுக்கு அமைவாக, தேசியப் பாதுகாப்பு படையினரால் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு  கிளிநொச்சி பனங்கண்டி பகுதியில் புதிதாக வீடு ஒன்று நிர்மாணித்து கையளிக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரி விக்கும் லியனுகே...

ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு அழைப்பு விடுவித்த  ஜனாதிபதி…!

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு அழைப்பு விடுத்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி, இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் ஆயுதம் தாங்கிய உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தமது...

ஹெஸ்புல்லா அமைப்பு மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்!

இஸ்ரேலின் புலனாய்வு பிரிவான மொசாட் அமைப்பின் தலைமையகத்தினை நோக்கி ஹெஸ்புல்லா அமைப்பு செலுத்திய ஏவுகணைகளை இடைமறித்து அழித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய தலைநகர் டெல்அவியில் உள்ள மொசாட் தலைமையகத்தினை இலக்குவைத்தே ஹெஸ்புல்லா அமைப்பு ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டது என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இதேவேளை இஸ்ரேலிய தலைநகரை நோக்கி ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதாக ஹெஸ்புல்லா அமைப்பு...

யாகி சூறாவளி காரணமாக 220 பேர் பலி!

யாகி சூறாவளி காரணமாக மியன்மாரில் இதுவரை 220 பேர்வரை உயிரிழந்ததாக அந்த நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. இதுவரையில் 80 பேர் தேடப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் இச் சூறாவளியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.

அவசரகால திட்டம் தயாரிப்பதற்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானிகள் அனுமதி…!

ஜனாதிபதி தேர்தல் திகதி மற்றும் முடிவுகள் அறிவிக்கப்படும் போது நாட்டில் ஏற்படக்கூடிய எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்வதற்காக பொலிஸாரையும் ஆயுதப்படையினரையும் இணைத்து 'அவசரகால திட்டம்' ஒன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானிகளுக்கு அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவசர நிலை ஏற்படக்கூடும் என பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது பாதுகாப்பு பிரதானிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதை அடுத்து இந்த அனுமதி...

மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப் பிரிவின் 14 வது ஆண்டு நிறைவு விழா…!

மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப் பிரிவின் 14 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் முப்படையினர் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வுகளின் இறுதி நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை(07.09) மதியம் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. மன்னார் தள்ளாடி இராணுவத்தின்  54 வது காலாட்படை பிரிவின் தளபதி மேஜர். ...

வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்!

குறிப்பிட்ட பகுதிகளில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக அனைத்து ஆயுதப் படை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 2024 ஆகஸ்ட் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை...

பங்களாதேஷில் தொடரும் பதற்றம் காரணமாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!

பங்களாதேஷில் தொடரும் பதற்றம் காரணமாக அந்நாட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இராணுவம் தலைமையிலான அரசை ஏற்க மாட்டோம் என வலியுறுத்தி மாணவர்கள் தலைமையில் போராட்டங்களை நடத்துபவர்கள் இராணுவ அதிகாரிகளை சந்திக்க உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்தோடு, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமையேற்க வேண்டுமெனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். பங்களாதேஷ் பிரதமராக இருந்த...
- Advertisement -spot_img

Latest News

அர்ச்சுனா எம்.பிக்கு பிடியாணை பிறப்பிப்பு

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமதானுக்கு பிடியாணை பிறப்பிக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (24) நடவடிக்கை எடுத்துள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு...
- Advertisement -spot_img