Wednesday, July 22, 2026
No menu items!

இலங்கை மின்சார சபை

மூன்றாம் காலாண்டில் இலங்கை மின்சார சபை இலாபம் 85% வீழ்ச்சி – ஆண்டின் முதல் 9 மாதங்களில் 9.58 பில்லியன் இழப்பு!

இலங்கை மின்சார சபை (CEB) வெளியிட்டுள்ள சமீபத்திய நிதி அறிக்கைகளின்படி, 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் இலாபம் 85% வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 24.58 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டிய நிலையில், இந்த ஆண்டு அதே காலத்தில் இலாபம் 3.58 பில்லியன் ரூபாய்க்கு சரிந்துள்ளது. இது ஆண்டுக்கு தலைமுறை ஒப்பீட்டில்...

CEB விசாரணை நடுவே தகராறு – கோப் குழுவில் ஏற்பட்ட சர்ச்சை ​..!

இலங்கை மின்சார சபையுடன் (CEB) தொடர்புடைய விடயங்களை விசாரிப்பதற்காக இலங்கை ட்ரான்ஸ் போர்மர்ஸ் நிறுவனம் (Lanka Transformers Company) நேற்று கோப் குழுவின் (Committee on Public Enterprises) முன் அழைக்கப்பட்டிருந்தது. எனினும், ஒரு தனியார் நிறுவனத்தை குழுவின் முன் அழைத்தது குறித்து, குழுவின் உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்....

வேலை நிறுத்தத்தை நிறுத்திய மின்சார சபை தொழிற்சங்கங்கள்!

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள், கடந்த சில வாரங்களாக நடத்தப்பட்ட வேலை நிறுத்த நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளன. இது, தொழிற்சங்கங்கள் மற்றும் மின்சார அமைச்சரிடையே நடந்த சமீபத்திய கலந்துரையாடல்களில் சில வாய்மொழி ஒப்பந்தங்கள் எட்டப்பட்டதும், அந்த ஒப்பந்தங்களை எழுத்துப்பூர்வமாக உறுதிப்படுத்தியதும் காரணமாகும். மின்சார வாரியத்தை நான்கு முக்கிய பிரிவுகளாகப் பிரித்து மறுசீரமைப்பது தொடர்பான அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக,...

இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தும் மின்சார சபை பொறியாளர்கள்!

இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் இன்று (6) முதல் தனது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. அதன்படி, மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் இன்று முதல் நிறுத்தப்படும் என சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்”...

நாடளாவிய ரீதியில் 30,000 மின்விநியோகத் தடைகள் — இலங்கை மின்சார சபை!

மழையுடனான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 30,000 மின்விநியோகத் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. எனினும், தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்விநியோகத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மின்சார தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.

மின்சார சபை தொழிற்சங்க போராட்டம் எதிர்வரும் புதன்கிழமை வரை தொடரும்!

இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் தற்போது முன்னெடுத்து வரும் சட்டப்படி வேலை செய்வதற்கான போராட்டம் எதிர்வரும் புதன்கிழமை (செப்டம்பர் 24) வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை சுதந்திர ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்த, நேற்று (செப்டம்ப-22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டார். "எங்கள் கோரிக்கைகள்...

சுகயீன விடுமுறை போராட்டத்தில் மின்சார சபை ஊழியர்கள்!

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். வேலைநிறுத்தப் போராட்டத்தின் இரண்டாம் கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்தார்.    

புதிய மறுசீரமைப்பின் கீழ் தொழில்புரிய விரும்பாத ஊழியர்கள் இழப்பீட்டுத் தொகையுடன் வெளியேறலாம் ; எரிசக்தி அமைச்சர்!

இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு பணிகள் ஊழியர்களின் வேலைப் பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி உறுதியளித்தார். கொழும்பில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் உரையாற்றியபோது, மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் CEB நான்கு தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டாலும், அவை அனைத்தும் 100 சதவீதம்...

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அமைய, மின் தடை புதுப்பிப்பு, கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட செயற்பாடுகள் கடமை நேரங்களில் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, நாளையதினம் (17) முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார...

இலங்கை மின்சார சபையை பிரிப்பதற்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கை தீவிரம்!

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிரான சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை இன்று (15) முதல் தீவிரப்படுத்தப் போவதாக இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் தொடங்கிய தொழிற்சங்க நடவடிக்கையை மூன்று கட்டங்களாக நடத்த இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பிற தொழிற்சங்கங்கள் முடிவு...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img