Saturday, April 25, 2026
No menu items!

சந்தேக நபர்

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது!

மார்ச் 17 ஆம் திகதி கிராண்ட்பாஸ் காவல் பிரிவுக்குட்பட்ட நாகலகம் தெருவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நாகலகம் தெரு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு காயமடைந்தனர். சம்பவம் குறித்து கிராண்ட்பாஸ் காவல்துறையினர் விசாரணைகளைத் தொடங்கினர், அதன்படி, பாதிக்கப்பட்டவர்களின் தொலைபேசி...

உள்நாட்டில்  தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!

அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  எல்லேவெவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது  உள்நாட்டில்  தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை (20/03/2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அரலகங்வில பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவராவார். இதேவேளை ஹுங்கம பொலிஸ் பிரிவின்  ரன்ன பகுதியிலும்...

போதைப்பொருள் கடத்தல் காரரான ரன் மல்லியின் நண்பன் ஹெரோயினுடன் கைது..!

மாத்தறை - திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊருகமுவ பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று புதன்கிழமை (19/03/2025) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்ஹேனகொட, ஊருகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரிடமிருந்து 33 கிலோ 106 கிராம் ஹெரோயின்...

பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது..!

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொக்குவில் பகுதியில் 290 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவன் மானிப்பாய் பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை (3/20/2025) கைது செய்யப்பட்டுள்ளார். 27 வயதுடைய இளைஞன் ஒருவனே கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி திரு. G.J.குணதிலகவின் கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினரால்...

கம்பஹாவில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

கம்பஹா - கணேமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கணேமுல்ல பொலிஸாரால் புதன்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார். கணேமுல்ல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடம் இருந்து 67.5...

பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் மடக்கி பிடிப்பு..!

பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 31 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்  மேல் மாகாண (தெற்கு) பிரிவு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் ஹோமாகம, கலாவிலவத்தையில் 5 கிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கோணபால பகுதியைச் சேர்ந்தவர் எனவும்,  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன்,...

ஹெராயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

ஹோமாகம, கலவிலவத்தை பகுதியில் ஹெராயினுடன் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (18) சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சந்தேக நபர் 12.05.2023 அன்று அவிசாவெல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பலரை கடுமையாக...

மித்தெனியா கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு பிடியாணை பிறப்பிப்பு!

மித்தெனியவில் மூன்று குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற சம்பவத்திற்குத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு சந்தேக நபர்களுக்கு வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணைகளைப் பிறப்பித்துள்ளது. “தம்பிலி லஹிரு” என அழைக்கப்படும் லஹிரு மதுஷன் மற்றும் “பேகோ சமன்” என அழைக்கப்படும் நிர்மலா சஞ்சீவ ஆகிய சந்தேக நபர்கள் டுபாயில் பதுங்கியிருப்பதாக நம்பப்படுகிறது. மித்தேனிய காவல்துறைப் பொறுப்பதிகாரி, தலைமை...

காத்தான்குடி பகுதியில் போதை மாத்திரைகளுடன் வர்த்தகர் கைது!

சுமார் 4,000 போதை மாத்திரைகளுடன் வர்த்தகர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக காத்தான்குடி காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் குறித்த போதை மாத்திரைகளைச் சந்தேக நபர் விற்பனை செய்து வந்துள்ளார். 35 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான 4,000...

மதுபோதையில் காரினை செலுத்திய இளைஞர் கைது!

காவல்துறையினரின் உத்தரவை மீறிப் பயணித்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் காரினை செலுத்திய 20 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு பண்டாரகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிறந்தநாள் வீடொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பும் வேளையில் குறித்த நபரை காவல்துறையினர் வீதி போக்குவரத்து சோதனைக்காக நிறுத்துமாறு சைகை செய்துள்ளனர். எனினும் குறித்த நபர் காவல்துறையினரின் சைகையினை பொருட்படுத்தாமல்...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img