Sunday, April 26, 2026
No menu items!

சாரதி

சாரதி திடீர் சுகயீனமுற்றதால் விபத்துக்குள்ளான பேருந்து..!

ஏ - 9 வீதியில் நேற்று திங்கட்கிழமை (24/02/2025) மாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர். பேருந்தின் சாரதி திடீரென சுகயீனமுற்றதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஹெட்டிப்பொல பகுதியிலிருந்து மாத்தளை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து, பஸ் சாரதி பிரதேசவாசிகளின் உதவியுடன் நாலந்த வைத்தியசாலையில்...

இளங்குமரன் எம்.பியை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்..!

விபத்தில் சிக்கிக் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனின் உடல் நிலை தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டறிந்து கொண்டார். யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பயணித்த வாகனம்...

தனியார் பேருந்தின் சாரதி மீது தாக்குதல் – வெளியான பகீர் தகவல்..!

கிளிநொச்சி அக்கரயான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிநொச்சி ஆடை தொழிற்சாலையில் இருந்து நேற்று (12.02.2025) மாலை அக்கராயன் பகுதிக்கு ஆடை தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை வழிமறித்து மதுபோதையில் வந்தவர் பேருந்தின் கண்ணாடியை உடைத்துள்ளதுடன் சாரதி மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். அதே சமயம் கிளிநொச்சியிலிருந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி அக்கரயான் பகுதிக்கு சென்ற...

வீதி விபத்துக்களுக்கு பொலிஸாரும் காரணமா?

அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் மரணங்கள், அங்கவீனங்கள் போன்றன ஏற்படுகின்றன. அந்தவகையில் இந்த விபத்துக்களுக்கு கட்டாக்காலி கால்நடைகள், மது போதையில் சாரத்தியம், அவதானமின்மை, வீதி விதிமுறைகளை பின்பற்றாமை, அதிக வேகம் மற்றும் உறக்கம் என்பன காணப்படுகின்றன. அத்துடன் பொலிஸாரின் செயற்பாடுகளும் விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து பொலிசார்,...

மின்சாரத் தூணுடன் மோதிய வேன் – சாரதிக்கு நேர்ந்த கதி..!

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிள்ளையாரடி சர்வோதய வீதியில் வீதியைவிட்டு விலகிய வேன் மின்சார தூணுடன் மோதிய விபத்தில் மின்சார தூண் உடைந்து வீழ்ந்ததுடன் வேன் பலத்த சேதமடைந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26/1/2025) இரவு இடம்பெற்றுள்ளதுடன் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீதியில் சம்பவதினமான நேற்று இரவு 8.00 மணிக்கு வேகமாக...

கொழும்பு பிரதான வீதியில் லொறி விபத்து!

பதுளை-கொழும்பு பிரதான வீதியில், தெமோதர சந்தியில் ஓடுகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் சாரதி மற்றும் ஒரு சக சாரதி காயங்களுக்கு உள்ளானதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து பதுளைக்கு ஓடுகளை ஏற்றிச் சென்ற இந்த லொறி, இன்று (23) காலை தெமோதர சந்தியில் உள்ள வளைவுக்கு அருகில் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த...

தொடருந்து சேவைகளில் தாமதம் !

சாரதிகளின் பற்றாக்குறையால்,இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் வரை தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. <!-- -->

பேருந்துடன் உந்துருளி மோதிய விபத்தில் ஒருவர் பலி!

கிளிநொச்சி - கந்தசாமி கோவிலுக்கு அருகாமையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இன்று காலை யாழ்ப்பாணம் - பருத்திதுறையில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துடன் உந்துருளி ஒன்று மோதுண்டதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் உந்துருளியில் பயணித்தவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக...

சாரதிகளின் வயதெல்லை 60 வயதா? – பிமல் ரத்நாயக்க உடைத்த உண்மை..!

பொதுப்போக்குவரத்துக்கு இணைத்துக் கொள்ளப்படவேண்டிய சாரதிகளின் வயதெல்லை 60 வயதுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனப் பரப்பப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் பேருந்து தொடர்பில் அமுலான சில செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பேருந்து...

உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் மேலும் இருவரின் சடலங்கள் மீட்பு!

காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் மேலும் இருவரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை சடலமாக மீட்கப்பட்டவர்களில் ஒருவர் மத்ரஸா மாணவர் என்பதுடன், மற்றையவர் உழவு இயந்திரத்தின் சாரதியாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இதுவரை அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img